Don't Miss!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்ட ரஜினி!
உடல்நிலை சரியான பிறகு, ரஜினியைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
அப்படியும், தனது ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நண்பர்களுடன் தினசரி உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி.
அடுத்து வெளியில் செல்லத் தொடங்கியுள்ளார். முன்பு மும்பைக்கு ஷூட்டிங் போனவர், அடுத்து தெரிந்த நண்பர்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்.
பொதுவாக எந்தப் புதிய படம் வெளியானாலும் ரஜினி அதைப் பார்த்து பாராட்ட வேண்டும் என திரையுலகினர் எதிர்ப்பார்ப்பது வழக்கம். அவரும் அதைத் தவறாமல் செய்து, இளைஞர்களை ஊக்குவித்துவந்தார். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அவர் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பது நின்று போனது. தனது சிஷ்யன் அஜீத்தின் படத்தையே அவர் தன் வீட்டில்தான் பார்த்தார்.
இப்போது அவர் பழையபடி சுறுசுறுப்பாக, இயல்பாக உள்ளதால் மீண்டும் வெளியில் வந்து படம் பார்க்க ஆரம்பித்துள்ளார்.
அப்படி அவர் பார்த்துள்ள முதல்படம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள ஏழாம் அறிவு. சென்னையில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் அவர் இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்தார். அவருடன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் வந்திருந்தார்.
ரஜினியை வரவேற்க படத்தின் ஹீரோ சூர்யாவும் அவரது மனைவி நடிகை ஜோதிகாவும் தியேட்டர் வாசலில் காத்திருந்தனர்.
படம் பார்த்து முடித்த ரஜினி, 'எக்ஸலென்ட்' என்று பாராட்டினார். முருகதாஸ், சூர்யா உள்ளிட்டோர் கடுமையாக உழைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவரை சூர்யாவும் ஜோதிகாவும் வழியனுப்பி வைத்தனர்.