Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினி பரிந்துரையில் மச்சினி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ்
சென்னை: சவுந்தர்யா இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷை நடிக்க வைக்குமாறு சூப்பர் ஸ்டார் தெரிவித்துள்ளாராம்.
கோச்சடையான் படம் மூலம் இயக்குனரானார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. தற்போது அவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்குகிறார்.
படத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்க விரும்புகிறார் சவுந்தர்யா.
சவுந்தர்யா
சவுந்தர்யாவின் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிக்க விரும்பும் புதுமுகங்கள் தங்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு சவுந்தர்யா ட்விட்டரில் அறிவித்திருந்தார்.
மோகன்லால் மகன்
சவுந்தர்யா தனது படத்தில் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவை ஹீரோவாக்க நினைத்தாராம். ஆனால் அவரோ எனக்கு இயக்கத்தில் தான் இஷ்டம், ஹீரோவாக நடித்தாலும் முதலில் மலையாள படத்தில் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம்.
அகில்
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலாவின் மகன் அகிலை நடிக்க வைக்கவும் யோசித்துள்ளனர். அப்போது தான் சவுந்தர்யா ஹீரோ குறித்து தனது தந்தை ரஜினியிடம் ஆலோசித்துள்ளார்.
தனுஷ்
ஏம்மா, படத்தில் நடிப்புக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது. புது முகங்கள் எதற்கு நம்ம மாப்பிள்ளை தனுஷை நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே. அவரிடம் பேசிப் பாரு என்று ரஜினி சவுந்தர்யாவிடம் தெரிவித்துள்ளாராம்.
சம்மதம்
தனுஷை இயக்க வேண்டும் என்று சவுந்தர்யா தனது ஆசையை முன்பே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனுஷிடம் தனது படத்தில் நடிக்குமாறு சவுந்தர்யா கேட்டவுடன் அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.