18ம் நூற்றாண்டில் சுட்ட, ரஜினியின் லேட்டஸ்ட் ‘பஞ்ச்’ டயலாக்
சென்னை:'பஞ்ச்' டயலாக் இல்லாத ரஜினியின் சமீபத்திய படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு 'பஞ்ச்' மன்னன், நம்ம படையப்பா.
18ம் நூற்றாண்டு நாவலுக்கும், நம்ம சூப்பர் ஸ்டார் டயலாக்குக்கும் ஒரு தொடர்பு இருக்குமென உங்களில் யாராவது, எப்போதாவது நினைத்ததுண்டா?
சம்பந்தம் இருக்கிறது. ரஜினியின் பிரபல டயலாக் ஒன்று 18ம் நூற்றாண்டு நாவலாசிரியரான ஜானே அகஸ்டனின் நாவலில் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் என தற்போது தெரிய வந்துள்ளது.

நவீன பேச்சுவழக்கின் ராணி...
ஜானே அகஸ்டன், தற்போதைய நவீன பாஷையின் ராணி எனப்படுபவர், இவரின் நாவலில் தான் நமது சூப்பர் ஸ்டார் சுட்ட டயலாக் இருக்கிறது.

‘எம்மா’வில் சுட்ட ‘பாட்ஷா’
ஜானேயின் ‘எம்மா' நாவலில் ஒரு கதாபாத்திரம் பேசும் டயலாக் தான், சுரேஷ் கிருஷ்ணாவின் ‘பாட்ஷா'வில் வரும் பிரபல டயலாக் ஆகும்.

சுத்தி... சுத்தி சொன்னீங்க
சரி, சுத்தி வளைக்காமா அந்த டயலாக் என்னணு சொல்லிடுறோம். ‘நா ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி'னு தலைவர் விரலை சுத்தி... சுத்தி சொல்லுவாரே, அதுதாங்க அந்த சுட்ட டயலாக்.

கட்டுரையின் நீதி...
இதுலயிருந்து என்ன தெரியுதுனா... நம்ம சுரேஷ்கிருஷ்ணாவும் ஜானேயோட நாவல படிச்சிருக்காரு.


Click it and Unblock the Notifications











