Don't Miss!
- News இலங்கையில் ரூ7,500 கோடி மதிப்பிலான 802 கிலோ எடை ரத்தினக் கல்- உலகிலேயே மிகப் பெரியது!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மனிதனுக்கு நல்ல காலம் கெட்ட காலம்.. எதுவுமே நிரந்தரமில்லே!- ரஜினி
சென்னை: ஒரு மனிதனுக்கு கெட்ட காலமும் வரும் நல்ல காலமும் வரும்... எதுவுமே நிரந்தரமில்லை என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
ரஜினி, கமல் நடித்த 16 வயதினிலே படம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடந்தது.
விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா, பாக்யராஜ் என திரையுலக ஜாம்பவான்கள் பங்கேற்றனர்.
படத்தின் ட்ரைலரை ரஜினியும் கமலும் சேர்ந்து வெளியிட்டனர். விழாவில் ரஜினி பேசுகையில், "தயாரிப்பாளர் ராஜ்கண்ணு என்னை சந்தித்து 16 வயதினிலே படத்தை டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் செய்யப் போவதாக சொல்லி டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். அவரிடம் நான் இந்த படத்தில் கிடைக்கும் பணம் யாருக்கு போய் சேரும் என்று கேட்டேன். எனக்குத்தான் என்றார். அப்படியெனில் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றேன்.
ராஜ்கண்ணு சினிமாவில் மரியாதைக்குரியவர். சுயமரியாதை உள்ளவர். கர்வம் கிடையாது. 16 வயதினிலே படம் எடுத்தபோது நன்றாக ஓடாது என்றனர். ஆனால் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த ராஜ்கண்ணு, அன்றைக்கே சொந்தமாக ரிலீஸ் செய்தார். கமல் அப்போது பெரிய நடிகராக இருந்தார். படம் நன்றாக ஓடியது சந்தோஷமாக இருந்தது.
அதுமட்டுமல்ல, ராஜ்கண்ணு எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்ல ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.
கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் சிக்கலைச் சந்தித்த போது, 'பதினாறு வயதினிலே படத்தை மறுபடியும் வெளியிட்டு அதில் வரும் பணம் முழுவதையும் கமல்ஹாஸனுக்கே தரப் போகிறேன், என்று சொன்னவர் ராஜ்கண்ணு. தான் கஷ்டத்திலிருந்தாலும், அடுத்தவர் கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளாத மனம் அவருக்கு.
தற்போது 16 வயதினிலே மீண்டும் ரிலீசாக உள்ளது. இந்த படம் நன்றாக ஓட வேண்டும் என்று வேண்டுகிறேன். மனிதர்களுக்கு கஷ்டகாலம் வரும். கெட்ட காலம் வரும். ஆனால் அது நிரந்தரம் இல்லை. பழைய படங்கள் மீண்டும் ரிலீசுக்கு வருவது வரவேற்கத்தக்கது. இந்த படத்தையும் ஜெயிக்க வைக்க வேண்டும்," என்றார்.