twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜூலை முதல் வாரம் சென்னை திரும்புவார் ரஜினி! - தனுஷ்

    By Shankar
    |

    Rajinikanth
    திருமலை: ரஜினி தனது வழக்கமான உற்சாகத்துக்குத் திரும்பிவிட்டார். அவர் வரும் ஜூலை மாதம் சென்னை திரும்புகிறார். இன்னும் 15 நாட்களில் அவர் வந்துவிடுவார், என்றார் நடிகர் தனுஷ்.

    கடந்த ஏப்ரல் 29 முதல் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட ரஜினி, சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தார். ஆனாலும் சிறுநீரகப் பிரச்சினை மட்டும் தொடர்ந்ததால், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

    கடந்த ஏப்ரல் 14-ம் தேதி சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் டிஸ்சார்ஜ் ஆனால். ஆனால் வழக்கமான சில பரிசோதனைகளுக்காக அவர் சிங்கப்பூரிலேயே ஒரு மாதம் தங்கியிருப்பதாக அறிவித்தார்.

    ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரம் அவர் சென்னை திரும்பக் கூடும் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியின் மூத்த மருமகனும் நடிகருமான தனுஷ், "சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் ஆரோக்கியத்துடன் உள்ளார். வீட்டில் உடற்பயிற்சி செய்கிறார். யோகாவைத் தொடர்கிறார்.

    சிங்கப்பூரில் உள்ள கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இன்னும் 15 நாளில் அவர் சென்னை திரும்பிவிடுவார். விரைவில் நானும் சிங்கப்பூர் செல்வேன்," என்றார்.

    English summary
    Actor Danush told that his brother in law, superstar Rajini wwould return Chennai on July first week.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X