Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி!
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிக் கொண்டிருந்ததை ரஜினியும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அதிமுக அமோக வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது.
தோல்வி முகத்தில் இருந்த சிலர், இந்த வெற்றிச் செய்திகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கில், ரஜினி குறித்த மோசமான வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தனர்.
இந்த சூழலில், தனது வீட்டிருந்தே ஜெயலலிதாவுக்கு போனில் தன் வாழ்த்துக்களைக் கூறினார் ரஜினி.
இதுகுறித்து லதா ரஜினி கூறுகையில், "தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்புவார். நேற்று தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார். ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தோம்,'' என்றார்.
ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதுபற்றிக் கூறுகையில், "அப்பாவுக்கு இந்த தேர்தல் முடிவில் மிகுந்த மகிழ்ச்சி. எனவே தனது வாழ்த்தை ஜெயலலிதாவுக்கு தெரிவித்தார்", என்றனர்.