twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குஷ்புவுக்கு ஸாரி சொன்ன ரஜினி ரஜினி விரைவில் தாத்தாவாகப் போகிறார். இந்த சந்தோஷத்தில் இருந்த ரஜினியிடம்கால்ஷீட் கேட்கப் போய் அவரிடமிருந்து ஸாரி யை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளார் குஷ்பு.ரஜினியுடன் மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் குஷ்பு நடித்துள்ளார். அண்ணாமலை படத்தில்,கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ.. குஷ்பூ என்பாரே ரஜினி. அந்த சூப்பர்ஹிட் பாடலை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன?இப்படி ரஜினி, குஷ்புவை புகழ்ந்து பாடியது ஒரு காலம். ஆனால் அதே குஷ்புவை இப்போது மூட் அவுட்டாக்கிஅனுப்பி விட்டார் ரஜினி. குஷ்பு இப்போது நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு தயாரிப்பிலும், டிவி தொடர்களில் நடிப்பதிலும் மிகுந்தஆர்வம் காட்டி வருகிறார்.கணவர் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் கிரி என்ற படத்தை அர்ஜூனை வைத்துத் தயாரித்தார். அடுத்ததாக ஒருபடத்தை தயாரிக்க முடிவு செய்த குஷ்பு, ரஜினியிடம் கால்ஷீட் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.ரஜினியுடன் தனக்கு நல்ல நட்பு உள்ளதால் நிச்சயம் கால்ஷீட் கிடைத்து விடும் என்ற பெருத்த நம்பிக்கையுடன்ரஜினியைப் போய் பார்த்துள்ளார். கூடவே தனது மூத்த மகளையும் கூட்டிக் கொண்டு போயுள்ளார்.சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பு மற்றும் படத்தின் மாபெரும் வெற்றி குறித்து சிலாகித்துப் பேசிய பின்னர், தான்ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அதில் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளார்.அத்தோடு நில்லாமல் பெரிய காந்தித் தாத்தாவையும் எடுத்து அட்வான்ஸ் என்று நீட்டியுள்ளார். அதைப்பார்த்ததும் சிரித்துக் கொண்டே, இருக்கட்டும் குஷ்பு, யோசித்து சொல்கிறேன் என்று கூறி பணத்தை வாங்கிக்கொள்ளவில்லையாம்.ரஜினியின் கால்ஷீட்டோடு வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்திருந்த குஷ்புவுக்கு இது பெரும் ஏமாற்றமாகஅமைந்ததாம். இருந்தாலும், சூப்பர் ஸ்டாரை வலியுறுத்த முடியுமோ? எனவே பை சொல்லி விட்டு வீட்டுக்குக்கிளம்பினாராம்.ரஜினியை வைத்து ஒரு காலத்தில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி. அருணாச்சலம் படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு முன்பு வரை ரஜினியின் செல்வாக்கு அமோகமாக இருந்தது. ஆனால் அருணாச்சலம், அந்தசெல்வாக்கை தூக்கிப் போட்டு மிதித்து நசுக்கி விட்டது. நல்ல வேளையாக முத்து, படையப்பா ஆகிய படங்கள் ரஜினியைக் காப்பாற்றின. இருப்பினும் மீண்டும் பாபாரூபத்தில் ரஜினிக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. இப்போது சந்திரமுகி வந்து ரஜினியை மீண்டும் தூக்கிநிறுத்தியுள்ளது.இப்படிப்பட்ட நிலையில் மறுபடியும் சுந்தர்.சி.யின் படத்தில் நடிக்க ரஜினிக்கு தைரியம் வருமா என்ன?இதற்கிடையே ரஜினிகாந்த் சூப்பர் தாத்தா ஆகப்போகிறார். அவரது மகள் ஐஸ்வர்யாதனுஷ் முழுகாமல் உள்ளாராம். இந்த செய்தி ரஜினி வீட்டிலும், தனுஷ் வீட்டிலும் மிகப் பெரிய சந்தோஷத்தைக்கொடுத்துள்ளது. ரஜினி வீட்டிற்கு வரும் முதல் பேரப்பிள்ளை என்பதால் ரஜினியும், லதாவும்குஷியடைந்துள்ளனராம். அதேபோல தனுஷும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாகஉள்ளாராம். தனது மனைவியை ஒரு வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொள்கிறார். தனுஷ்வீட்டிலும் ஐஸ்வர்யாவை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்களாம். இதனால் தனது தாய் வீட்டுக்குக் கூடப் போகாமல் ஐஸ்வர்யா கணவர் வீட்டிலேயேஇருக்கிறார். இதுவரை சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி, தான் இனிமேல் சூப்பர் தாத்தாஆகப் போவதை அறிந்து உற்சாகமடைந்துள்ளாராம். தனுஷ்-ஐஸ்வர்யாவுக்குக் கிடைக்கப் போவது சுள்ளானா அல்லது சுள்ளியா என்பதுஇன்னும் 10 மாதத்தில் தெரிந்து விடும்!

    By Staff
    |

    ரஜினி விரைவில் தாத்தாவாகப் போகிறார். இந்த சந்தோஷத்தில் இருந்த ரஜினியிடம்கால்ஷீட் கேட்கப் போய் அவரிடமிருந்து ஸாரி யை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளார் குஷ்பு.

    ரஜினியுடன் மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் குஷ்பு நடித்துள்ளார். அண்ணாமலை படத்தில்,கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ.. குஷ்பூ என்பாரே ரஜினி. அந்த சூப்பர்ஹிட் பாடலை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன?

    இப்படி ரஜினி, குஷ்புவை புகழ்ந்து பாடியது ஒரு காலம். ஆனால் அதே குஷ்புவை இப்போது மூட் அவுட்டாக்கிஅனுப்பி விட்டார் ரஜினி.

    குஷ்பு இப்போது நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு தயாரிப்பிலும், டிவி தொடர்களில் நடிப்பதிலும் மிகுந்தஆர்வம் காட்டி வருகிறார்.

    கணவர் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் கிரி என்ற படத்தை அர்ஜூனை வைத்துத் தயாரித்தார். அடுத்ததாக ஒருபடத்தை தயாரிக்க முடிவு செய்த குஷ்பு, ரஜினியிடம் கால்ஷீட் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.

    ரஜினியுடன் தனக்கு நல்ல நட்பு உள்ளதால் நிச்சயம் கால்ஷீட் கிடைத்து விடும் என்ற பெருத்த நம்பிக்கையுடன்ரஜினியைப் போய் பார்த்துள்ளார். கூடவே தனது மூத்த மகளையும் கூட்டிக் கொண்டு போயுள்ளார்.

    சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பு மற்றும் படத்தின் மாபெரும் வெற்றி குறித்து சிலாகித்துப் பேசிய பின்னர், தான்ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அதில் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளார்.

    அத்தோடு நில்லாமல் பெரிய காந்தித் தாத்தாவையும் எடுத்து அட்வான்ஸ் என்று நீட்டியுள்ளார். அதைப்பார்த்ததும் சிரித்துக் கொண்டே, இருக்கட்டும் குஷ்பு, யோசித்து சொல்கிறேன் என்று கூறி பணத்தை வாங்கிக்கொள்ளவில்லையாம்.

    ரஜினியின் கால்ஷீட்டோடு வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்திருந்த குஷ்புவுக்கு இது பெரும் ஏமாற்றமாகஅமைந்ததாம். இருந்தாலும், சூப்பர் ஸ்டாரை வலியுறுத்த முடியுமோ? எனவே பை சொல்லி விட்டு வீட்டுக்குக்கிளம்பினாராம்.

    ரஜினியை வைத்து ஒரு காலத்தில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி. அருணாச்சலம் படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு முன்பு வரை ரஜினியின் செல்வாக்கு அமோகமாக இருந்தது. ஆனால் அருணாச்சலம், அந்தசெல்வாக்கை தூக்கிப் போட்டு மிதித்து நசுக்கி விட்டது.

    நல்ல வேளையாக முத்து, படையப்பா ஆகிய படங்கள் ரஜினியைக் காப்பாற்றின. இருப்பினும் மீண்டும் பாபாரூபத்தில் ரஜினிக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. இப்போது சந்திரமுகி வந்து ரஜினியை மீண்டும் தூக்கிநிறுத்தியுள்ளது.

    இப்படிப்பட்ட நிலையில் மறுபடியும் சுந்தர்.சி.யின் படத்தில் நடிக்க ரஜினிக்கு தைரியம் வருமா என்ன?

    இதற்கிடையே ரஜினிகாந்த் சூப்பர் தாத்தா ஆகப்போகிறார். அவரது மகள் ஐஸ்வர்யாதனுஷ் முழுகாமல் உள்ளாராம்.

    இந்த செய்தி ரஜினி வீட்டிலும், தனுஷ் வீட்டிலும் மிகப் பெரிய சந்தோஷத்தைக்கொடுத்துள்ளது.

    ரஜினி வீட்டிற்கு வரும் முதல் பேரப்பிள்ளை என்பதால் ரஜினியும், லதாவும்குஷியடைந்துள்ளனராம். அதேபோல தனுஷும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாகஉள்ளாராம்.

    தனது மனைவியை ஒரு வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொள்கிறார். தனுஷ்வீட்டிலும் ஐஸ்வர்யாவை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்களாம்.

    இதனால் தனது தாய் வீட்டுக்குக் கூடப் போகாமல் ஐஸ்வர்யா கணவர் வீட்டிலேயேஇருக்கிறார். இதுவரை சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி, தான் இனிமேல் சூப்பர் தாத்தாஆகப் போவதை அறிந்து உற்சாகமடைந்துள்ளாராம்.

    தனுஷ்-ஐஸ்வர்யாவுக்குக் கிடைக்கப் போவது சுள்ளானா அல்லது சுள்ளியா என்பதுஇன்னும் 10 மாதத்தில் தெரிந்து விடும்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X