சிவாஜி: பங்காரு அடிகளாரிடம் ரஜினி ஆசி மதுராந்தகம்: இன்று மேல்மருவத்தூர் சென்ற ரஜினி அங்கு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார். சந்திரமுகி படத்தின் பூஜைக்கு முன் பங்காரு அடிகளாரிடம் ரஜினி ஆசி பெற்றார். படம் பெரும் பெற்று, நாளை சந்திரமுகி படத்தின் 175வது நாள் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது ரஜினி தனது அடுத்த படமான சிவாஜிக்கு தயாராகி வருகிறார். இந் நிலையில் இன்று காலை கருப்பு வேட்டி, வெள்ளை சட்டை சகிதம் வழக்கமான தனது எளிமையுடன் மேல்மருவத்தூர் வந்தார் ரஜினி. அவருடன் நடிகர் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார், இயக்குனர் வாசு ஆகியோரும் வந்தனர். கையில் பழத்தட்டுடன் வந்த ரஜினி, அதை பங்காரு அடிகளாரிடம் வழங்கி ஆசி பெற்றார். பின்னர் அம்மன் கருவறையில் தரிசனம் செய்த ரஜினி, தனது அடுத்த படமான சிவாஜிக்காக தன்னை ஆசீர்வதிக்கும்படி பங்காரு அடிகளாரிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு மீண்டும் அடிகளார் ஆசி வழங்கினார்.
மதுராந்தகம்:
இன்று மேல்மருவத்தூர் சென்ற ரஜினி அங்கு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்.
சந்திரமுகி படத்தின் பூஜைக்கு முன் பங்காரு அடிகளாரிடம் ரஜினி ஆசி பெற்றார். படம் பெரும் பெற்று, நாளை சந்திரமுகி படத்தின் 175வது நாள் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.
இப்போது ரஜினி தனது அடுத்த படமான சிவாஜிக்கு தயாராகி வருகிறார். இந் நிலையில் இன்று காலை கருப்பு வேட்டி, வெள்ளை சட்டை சகிதம் வழக்கமான தனது எளிமையுடன் மேல்மருவத்தூர் வந்தார் ரஜினி.
அவருடன் நடிகர் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார், இயக்குனர் வாசு ஆகியோரும் வந்தனர்.
கையில் பழத்தட்டுடன் வந்த ரஜினி, அதை பங்காரு அடிகளாரிடம் வழங்கி ஆசி பெற்றார். பின்னர் அம்மன் கருவறையில் தரிசனம் செய்த ரஜினி, தனது அடுத்த படமான சிவாஜிக்காக தன்னை ஆசீர்வதிக்கும்படி பங்காரு அடிகளாரிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு மீண்டும் அடிகளார் ஆசி வழங்கினார்.
Comments


Click it and Unblock the Notifications