twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்கு இன்னும் 3 படங்கள் தான் ரஜினிகாந்த் இன்னும் 3 படங்களில் தான் நடிப்பார் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அஜீத்தை வைத்து முதலில் தீனா, பின்னர் விஜய்காந்தை வைத்து ரமணா ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த முருகதாஸ் நீண்டஇடைவெளிக்குப் பிறகு களம் இறங்கிய படம் கஜினி. சூப்பர் டூப்பர் ஹிட் ஆன இந்தப் படத்தின் மூலம் அகில இந்திய அளவில்திரையுலக கவனத்தை தன் மீது திருப்பியுள்ளார்.கஜினியின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் என்ற படத்தைஇயக்கவுள்ளார். ஹைதராபாத்திலிருந்து திரும்பிய முருகதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டாலின் என்ற பெயரில்சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறேன். இதே படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளேன். இப்படத்தில் ரஜினி அல்லது விஜய் ஆகியோரில் ஒருவர் தான்நடிக்க முடியும். அவர்களுக்குத் தான் இந்தக் கதை பொருந்தும். எனது கஜினி படத்தை ரஜினி சார் பார்த்தார். பின்னர் என்னை வீட்டுக்கு வரவழைத்து சுமார் 2 மணி நேரம் மனம் விட்டுப் பேசினார். கஜினியை வெகுவாக பாராட்டினார்.அப்போது, ரமணா, கஜினி இரண்டு படங்களையும் நான் பார்த்தேன். இரண்டுமே சூப்பர். உங்களது இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விரும்புகிறேன். சிவாஜி படத்தைத் தொடர்ந்து மேலும் 3 அல்லதுநான்கு படங்களில் தான் நடிக்கப் போகிறேன். அதனால் எனக்கு பொருந்தும் வகையில் ஒரு கதையை சொல்லுங்கள் என்றார். அவர் கூறிய படி பார்த்தால் இன்னும் 3 அல்லது 4 படங்களில் தான் நடிப்பார் என நினைக்கிறேன். அதற்குள் அவரை வைத்துஇயக்கி விட வேண்டும். ஆனால் அவருக்கான கதை இன்னும் அமையவில்லை, நேரமும் கூடி வர வேண்டும். கஜினி படம் அமீர்கானை வெகுவாக கவர்ந்து விட்டது. என்னையே இந்தியிலும் பண்ணச் சொல்லியுள்ளார். விரைவில் அமீர்கான்நடிப்பில் கஜினி இந்தியையும் கலக்கும் என்றார் முருகதாஸ்.

    By Staff
    |

    ரஜினிகாந்த் இன்னும் 3 படங்களில் தான் நடிப்பார் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

    அஜீத்தை வைத்து முதலில் தீனா, பின்னர் விஜய்காந்தை வைத்து ரமணா ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த முருகதாஸ் நீண்டஇடைவெளிக்குப் பிறகு களம் இறங்கிய படம் கஜினி. சூப்பர் டூப்பர் ஹிட் ஆன இந்தப் படத்தின் மூலம் அகில இந்திய அளவில்திரையுலக கவனத்தை தன் மீது திருப்பியுள்ளார்.

    கஜினியின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் என்ற படத்தைஇயக்கவுள்ளார். ஹைதராபாத்திலிருந்து திரும்பிய முருகதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டாலின் என்ற பெயரில்சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறேன்.

    இதே படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளேன். இப்படத்தில் ரஜினி அல்லது விஜய் ஆகியோரில் ஒருவர் தான்நடிக்க முடியும். அவர்களுக்குத் தான் இந்தக் கதை பொருந்தும். எனது கஜினி படத்தை ரஜினி சார் பார்த்தார்.


    பின்னர் என்னை வீட்டுக்கு வரவழைத்து சுமார் 2 மணி நேரம் மனம் விட்டுப் பேசினார். கஜினியை வெகுவாக பாராட்டினார்.அப்போது, ரமணா, கஜினி இரண்டு படங்களையும் நான் பார்த்தேன்.

    இரண்டுமே சூப்பர். உங்களது இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விரும்புகிறேன். சிவாஜி படத்தைத் தொடர்ந்து மேலும் 3 அல்லதுநான்கு படங்களில் தான் நடிக்கப் போகிறேன். அதனால் எனக்கு பொருந்தும் வகையில் ஒரு கதையை சொல்லுங்கள் என்றார்.

    அவர் கூறிய படி பார்த்தால் இன்னும் 3 அல்லது 4 படங்களில் தான் நடிப்பார் என நினைக்கிறேன். அதற்குள் அவரை வைத்துஇயக்கி விட வேண்டும். ஆனால் அவருக்கான கதை இன்னும் அமையவில்லை, நேரமும் கூடி வர வேண்டும்.

    கஜினி படம் அமீர்கானை வெகுவாக கவர்ந்து விட்டது. என்னையே இந்தியிலும் பண்ணச் சொல்லியுள்ளார். விரைவில் அமீர்கான்நடிப்பில் கஜினி இந்தியையும் கலக்கும் என்றார் முருகதாஸ்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X