Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தி ரீமேக்கில் ரஜினி? மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற மணிச்சித்திரத்தாழ் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட சந்திரமுகியில் நடித்து "மறுவாழ்வு" பெற்றுள்ள ரஜினி, அடுத்து இந்திப் பட ரீமேக்கில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.பாபா கொடுத்த படு தோல்வி காரணமாக அப்செட் ஆகிப் போயிருந்த ரஜினிக்கு சந்திரமுகி மிகப் பெரும் உற்சாகத்தைக்கொடுத்துள்ளது. இதுவரை ரஜினி படம் எதுவும் பெறாத அளவுக்கு வசூலை வாரிக் குவித்து வருகிறதாம் சந்திரமுகி.இந்த சந்தோஷத்துடன் ரிஷிகேஷ் சென்று விட்ட ரஜினி விரைவில் சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பியவுடன் அவரைசந்திக்க ஐந்து தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.அதில் முக்கியமானவர் எடிட்டர் மோகன். ரஜினிக்கு ஏற்ற ஒரு கதையை ரெடியாக வைத்துள்ளார் மோகன். இந்தியில் அமிதாப்பச்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற "வக்த் என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை மோகன்வாங்கியுள்ளார். இந்தக் கதையைத் தான் ரஜினிக்கு சொல்லப் போகிறாராம்.அமிதாப் வேடத்தில் ரஜினியும், அக்ஷய் குமார் வேடத்தில் தனது மகன் ஜெயம் ரவியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றுகூறும் மோகன், படத்தை தனது மகன் ராஜாவே இயக்குவார் என்றும் கூறி வருகிறார். இருப்பினும் இந்தக் கதையை ரஜினி ஏற்பாராஎன்பது உறுதியாகத் தெரியவில்லை. மோகன் இப்படி திட்டமிட்டிருந்தாலும், ரஜினிக்கு நெருக்கமானவர்கள் வேறு மாதிரியாக கூறுகிறார்கள். தனக்கு மிகப் பெரியஉற்சாகத்தைக் கொடுத்துள்ள சந்திரமுகியை இயக்கிய பி.வாசுவுக்கே அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பைத் தர ரஜினிவிரும்புகிறார். மோகன் படத்தை ரஜினி ஒப்புக் கொண்டாலும் கூட இயக்கும் வாய்ப்பு வாசுவுக்கே கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.மோகன் தவிர ரஜினியை முதன் முதலாக ஹீரோவாக நடிக்க வைத்து பிரேக் கொடுத்த பஞ்சு அருணாச்சலம், சத்யஜோதிதியாகராஜன், பூர்ணசந்திரராவ் ஆகியோரும் ரஜினியை சந்திப்போர் பட்டியலில் உள்ளனராம்.ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப்போகும் வாய்ப்பு இவர்களில் யாருக்கு கிடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை.யாராக இருந்தாலும் இயக்குநர் வாசு தான் என்பது உறுதியாகத் தெரிகிறது.அப்ப கே.எஸ்.ரவிக்குமார் கதி அதோ கதி தானா?
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற மணிச்சித்திரத்தாழ் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட சந்திரமுகியில் நடித்து "மறுவாழ்வு" பெற்றுள்ள ரஜினி, அடுத்து இந்திப் பட ரீமேக்கில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாபா கொடுத்த படு தோல்வி காரணமாக அப்செட் ஆகிப் போயிருந்த ரஜினிக்கு சந்திரமுகி மிகப் பெரும் உற்சாகத்தைக்கொடுத்துள்ளது. இதுவரை ரஜினி படம் எதுவும் பெறாத அளவுக்கு வசூலை வாரிக் குவித்து வருகிறதாம் சந்திரமுகி.
இந்த சந்தோஷத்துடன் ரிஷிகேஷ் சென்று விட்ட ரஜினி விரைவில் சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பியவுடன் அவரைசந்திக்க ஐந்து தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அதில் முக்கியமானவர் எடிட்டர் மோகன். ரஜினிக்கு ஏற்ற ஒரு கதையை ரெடியாக வைத்துள்ளார் மோகன். இந்தியில் அமிதாப்பச்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற "வக்த் என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை மோகன்வாங்கியுள்ளார். இந்தக் கதையைத் தான் ரஜினிக்கு சொல்லப் போகிறாராம்.
அமிதாப் வேடத்தில் ரஜினியும், அக்ஷய் குமார் வேடத்தில் தனது மகன் ஜெயம் ரவியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றுகூறும் மோகன், படத்தை தனது மகன் ராஜாவே இயக்குவார் என்றும் கூறி வருகிறார். இருப்பினும் இந்தக் கதையை ரஜினி ஏற்பாராஎன்பது உறுதியாகத் தெரியவில்லை.
மோகன் இப்படி திட்டமிட்டிருந்தாலும், ரஜினிக்கு நெருக்கமானவர்கள் வேறு மாதிரியாக கூறுகிறார்கள். தனக்கு மிகப் பெரியஉற்சாகத்தைக் கொடுத்துள்ள சந்திரமுகியை இயக்கிய பி.வாசுவுக்கே அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பைத் தர ரஜினிவிரும்புகிறார்.
மோகன் படத்தை ரஜினி ஒப்புக் கொண்டாலும் கூட இயக்கும் வாய்ப்பு வாசுவுக்கே கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மோகன் தவிர ரஜினியை முதன் முதலாக ஹீரோவாக நடிக்க வைத்து பிரேக் கொடுத்த பஞ்சு அருணாச்சலம், சத்யஜோதிதியாகராஜன், பூர்ணசந்திரராவ் ஆகியோரும் ரஜினியை சந்திப்போர் பட்டியலில் உள்ளனராம்.
ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப்போகும் வாய்ப்பு இவர்களில் யாருக்கு கிடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை.யாராக இருந்தாலும் இயக்குநர் வாசு தான் என்பது உறுதியாகத் தெரிகிறது.
அப்ப கே.எஸ்.ரவிக்குமார் கதி அதோ கதி தானா?
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!