இழுத்தடித்த த.செ.ஞானவேல்?.. உச்சக்கட்ட டென்ஷனான ரஜினிகாந்த்?.. வேட்டையன் நிலைமை இதுவா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அப்படம் வசூல் ரீதியாகவும் செம ரெஸ்பான்ஸை பெற்று உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். படத்தை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கிவருகிறார். படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது.

ரஜினிகாந்த்துக்கென்று இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சாமானியர்களிலிருந்து செலிபிரிட்டிகள்வரை ரஜினியின் தாக்கம் இல்லாமல் இல்லை. அந்த அளவுக்கு தன்னுடைய ஸ்டைல், நடிப்பு என அனைத்திலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். சினிமாவுக்கு யார் நடிக்க வந்தாலும் ரஜினியை போல் ஆக வேண்டும் என்றுதான் உள்ளே வருவார்கள். அதேபோல் இப்போது உச்சத்தில் இருக்கும் விஜய், அஜித் போன்றோரும்கூட சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு ஆசைப்பட்டது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth Got Angry With Vettaiyan Director Here are the details

சறுக்கல்: ரஜினிகாந்த் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது படங்கள் அசால்ட்டாக நூறு கோடி ரூபாய் வசூலை ஈட்டிக்கொண்டிருந்தன. இடையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்ததோடு மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தன. மேலும் அந்த இரண்டு படங்களின் தோல்வி காரணமாக ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலியும் ஆட்டம் காண ஆரம்பித்தது.

கம்பேக் கொடுத்த ஜெயிலர்: சூழல் இப்படி இருக்க இளம் இயக்குநரான நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார் ரஜினிகாந்த். கடந்த வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ரஜினிகாந்த்தின் நடிப்பு, நெல்சனின் மேக்கிங் என அத்தனையுமே க்ளிக் ஆனதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். இதன் காரணமாக ரஜினிகாந்த் தரமான கம்பேக் கொடுத்துவிட்டதாக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

வேட்டையன்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் அவர் கமிட்டானார். ஒன்று லால் சலாம். இன்னொன்று வேட்டையன். தனது மகள் இயக்கியிருக்கும் லால் சலாம் படம் கடந்த ஒன்பதாம் தேதி வெளியாகி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அடுத்ததாக ஜெய்பீம் படத்தை இயக்கி பெரும் கவனம் ஈர்த்த த.செ.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் தற்போது ஆந்திராவில் நடந்துவருகிறது. இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

டென்ஷனில் ரஜினிகாந்த்: படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்துள்ளன. ரஜினியின் போர்ஷன் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் கூலி படத்தில் நடிக்கிறார். அதன் ஷூட்டிங் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் வேட்டையன் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு ரஜினிகாந்த் ரெஸ்ட் எடுக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால் இப்போதோ ஞானவேல் இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறி ரஜினியிடம் ஒரு சில நாட்கள் கால்ஷீட் கேட்டதாகவும்; அதனால் உச்சக்கட்ட டென்ஷனான ரஜினிகாந்த் முதலில் மறுதலித்துவிட்டு இப்போது ஒன்றிரண்டு நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X