Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரஜினியின் 'வளர்ப்பு மகனுக்கு' இன்று 39வது பிறந்தநாள்!!
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக இந்தி படத்தில் நடித்த நடிகர் ரித்திக் ரோஷன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி சூசன் சொகுசு படகில் பிரபலங்களுக்கு நேற்று இரவு பார்ட்டி கொடுத்தார். பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ரோஷனின் மகனான ரித்திக் ஆஷா என்னும் இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு ஆப் கே தீவானே என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
ரித்திக் ரோஷன் அபிஷேக் பச்சன் மற்றும் கரீனா கபூர் அறிமுகமான அதே ஆண்டில் ஹீரோவாக அறிமுகமானார். அவர் கைட்ஸ் மற்றும் ஜிந்தகி நா மிலேகி தோபாரா ஆகிய படங்களில் பாடியுள்ளார். இளம் வயதில் அவருக்கு பேசுவதில் சிரமம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் வளர்ப்பு மகன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பகவான் தாதா என்ற இந்தி படத்தில் அவரின் வளர்ப்பு மகனாக நடித்துள்ளார் இளம் வயது ரித்திக்.
முதல் படத்துக்கே 102 விருதுகள்
ரித்திக் ரோஷன் தனது தந்தையின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமான கஹோனா பியார் ஹே படம் 102 விருதுகளை வாங்கி லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தது.
வலது கையில் ஆறு விரல்
ரித்திக்கிற்கு வலது கையில் இரண்டு பெருவிரல்கள் அதாவது ஆறு விரல்கள் உண்டு. அது ராசி என்பதால் ஆறாவது விரலை அவர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றவில்லை.
பாம்பா மனுஷனா
ரித்திக் ரோஷன் டான்ஸ் ஆடினால் கண் இமைக்காமல் பார்க்கத் தோன்றும். மனிதர் அந்த அளவுக்கு ஆடுவார். அவர் எவ்வளவு பெரிய கூட்டத்தில் ஆடினாலும் அவர் டான்ஸ் மட்டும் தனித்து தெரியும்.