Don't Miss!
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தயாரிப்பாளர்கள் ஆயிரம் சொல்வார்கள்... அதைக் கேட்டு ஏன் அதிக விலைக்கு வாங்குகிறீர்கள்? - ரஜினி
சென்னை: ஒரு படத்தை விற்க தயாரிப்பாளர்கள் பல விஷயங்களைச் சொல்வார்கள். அதைக் கேட்டு விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் ஏன் அதிக விலைக்கு வாங்கி, பின்னர் நஷ்டம் என்று சொல்கிறீர்கள்? என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பினார்.
ரஜினி படங்களை விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அதிக விலைக்கு வாங்கி திரையிடுகிறார்கள். ஆரம்பத்தில் நல்ல ஓபனிங், செம கலெக்ஷன் என்று கூறும் அவர்களே பின்னர் நஷ்டம் என்று கூறி போராட்டம் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக லிங்கா படத்தை வைத்து எழுந்த சர்ச்சைகளும் போராட்டங்களும் நினைவிருக்கலாம். ரூ 160 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்பட்ட அந்தப் படத்துக்கு நஷ்ட ஈடாக ரூ 10 கோடியைத் தந்தார் ரஜினி.
கபாலி படம் பெரிய வெற்றி என்று சொல்லப்பட்ட போதும், இரண்டு ஏரியாக்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் மட்டும் நஷ்டம் என்று கூறினர்.
இதுவரை இந்த விவகாரங்கள் குறித்து எதுவும் பேசாமலிருந்த ரஜினி, முதல் முறையாக இன்று நெருப்புடா பட விழாவில் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
தயாரிப்பாளர்கள் சினிமாவில் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதை மனதில் படத்தை எடுக்க முன்வர வேண்டும். தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து படம் எடுக்கக்கூடாது.
ஒரு தயாரிப்பாளர் தன் படத்தை விளம்பரப்படுத்த, நல்ல விலைக்கு விற்க ஆயிரம் சொல்வார்கள். படம் குறித்து பெரிய அளவில் பேசத்தான் செய்வார்கள். அதைக் கேட்டு அதிக பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் பின்னர் நஷ்டம் என்று புலம்பினால் எப்படி?
இந்தத் துறையில் உள்ள முன்அனுபவம் வாய்ந்த விநியோகஸ்தர்களின் ஆலோசனைகளை பெற்று படங்களை விற்பனை செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்," என்றார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!