Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினிகாந்தால் மனம் மாறிய கார்த்தி
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அறிவுரையைக் கேட்டு கார்த்தி தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு பருத்தி வீரன் படம் மூலம் நடிகரானவர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி. கேமராவுக்கு பின்னால் நிற்க விரும்பிய கார்த்தி நல்ல கதை கிடைத்ததும் மனதை மாற்றிக் கொண்டு நடிகரானார். அவரின் முதல் படமே அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.
முதலில் பருத்தி வீரன் போஸ்டரைப் பார்த்தவர்கள் யாருய்யா, இந்த ஆளு என்று நினைத்தனர். படத்தைப் பார்த்த பிறகு கார்த்தி மக்கள் மனதை கவர்ந்துவிட்டார். முதல் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.
ஸ்லோவாக செல்லும் கார்த்தி
கார்த்தி வரும் படங்களில் எல்லாம் நடிக்காமல் பார்த்து பார்த்து கதையை தேர்வு செய்து நடிக்கிறார். 2007ல் இருந்து இதுவரை அவர் பையா, சிறுத்தை, சகுனி உள்ளிட்ட 7 படங்களில் தான் நடித்துள்ளார். கோ படத்தில் ஒரு சீனுக்கு வந்து செல்வார்.
ரஜினி சொன்ன அட்வைஸ்
இளம் நடிகர்கள் பார்த்து பார்த்து நடிக்கக் கூடாது. பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பது தான் அவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முக்கியமாக ரசிகர்களுக்கும் நல்லது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக்கு அறிவுரை கூறியுள்ளார்.
ரஜினியால் மனம் மாறிய கார்த்தி
ரஜினியின் அறிவுரையை ஏற்று கார்த்தி இனி பல வகை கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். மசாலா படங்களில் நடித்து வந்த கார்த்தியை இனி வித்தியாசமான கதாபாத்திரங்களில் எதிர்பார்க்கலாம்.