Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
யோகி பாபுவுக்காகக் காத்திருந்த சூப்பர் ஸ்டார்... தர்பார் ஷூட்டிங் இன்றே கடைசி!
சென்னை: ரஜினிகாந்தின் தர்பார் பட கடைசி நாள் ஷூட்டிங் சென்னையில் இன்று நடக்கிறது. இதோடு இதன் படப்பிடிப்பு முடிகிறது.
பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. இதன் பாடல்கள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த வாரம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தர்பாரின் கடைசி நாள் ஷூட்டிங், சென்னையில் இன்று நடக்கிறது. இதில் யோகிபாபு, ரஜினிகாந்த் உட்பட பலர் பங்குபெறுகின்றனர்.
யோகிபாபு பிசியாகிவிட்டதால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை. அவருக்காகக் காத்திருந்து இன்று ஷூட்டிங் நடப்பதாகக் கூறப்படுகிறது.
'யோகிபாபு வரும்போது ஷூட்டிங் வச்சுக்கலாம்' என்று ரஜினி சொன்னாராம். அதுதான் ரஜினியின் பெருந்தன்மை என்கிறது படக்குழு.
தர்பார் படம் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வருகிறது.