Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியிலும் சொந்தக் குரலில் பாடிய ரஜினி!
மன்னனுக்குப் பிறகு எத்தனையோ படங்களில் பாடக் கேட்டும் புன்னகையோடு மறுத்துவிட்ட அவர், இப்போது கோச்சடையானில் பாடினார். முதலில் தமிழில் பாடியவர், அடுத்து இந்தியிலும் அந்தப் பாட்டைப் பாடியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சர்ய செய்தி.
காரணம், தமிழில் தயாராகி, இந்தியில் டப் செய்யப்படும் தன் முந்தைய படங்களுக்கு குரல் கொடுப்பதைக் கூடத் தவிர்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் இந்தப் பாடலை பாலிவுட்டில் இப்போதைய பிஸியான பாடலாசிரியர் இர்ஷாத் காமில் (லவ் ஆஜ்கல், ராக்ஸ்டார் பட பாடல்களை எழுதியவர்) எழுத, ஏஆர் ரஹ்மான் இசையில் ரஜினி பாடினார்.
"இதுவும் தத்துவப் பாடல்தான் என்றாலும் தமிழ்ப் பாடலுக்கும் இந்த இந்திப் பாடலுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். தமிழ் பாடலின் இந்தி வடிவமாக இல்லாமல், இர்ஷாத் காமில் அவரது சொந்த கற்பனை வரிகளை இதில் எழுதியுள்ளார். ரஜினி சிறப்பாகப் பாடியுள்ளார்," என்கிறார் படத்தின் தயாரபிப்பாளர் டாக்டர் முரளி மனோகர்.
ஆரம்பத்தில் இந்திப் பாடலை வேறு யாரையாவது வைத்து பாடவைக்கலாம் என்றுதான் ரஜினியே கூறினாராம். காரணம், அதில் இடம்பெற்றிருந்த கடினமான உருது வார்த்தைகள். வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லும் பாடல் என்பதால், மிகவும் இலக்கியத்தரம் வாய்ந்ததாக அந்த வரிகள் அமைக்கப்பட்டிருந்ததாம். பின்னர் ஒரு முறை படித்துப் பார்த்த பிறகு, ஒரே டேக்கில் பாடிக் கொடுத்து அசத்தியிருக்கிறார்!