Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கோவாவில் 'கோச்சடையான்' படத்தை புறக்கணித்தாரா ரஜினி?
கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியை ரஜினிகாந்த் புறக்கணித்துவிட்டார்.
2014-ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்து வருகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 75 நாடுகளை சேர்ந்த 179 படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, ‘மோஷன் கேப்ச்சர்' தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘கோச்சடையான்' திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.
இந்த படத்தின் திரையீட்டின்போது, கோச்சடையானில் கதாநாயகனாக நடித்திருந்த ரஜினிகாந்த் பங்கேற்பார் என விழா ஏற்பாட்டாளர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் படத்தின் இயக்குனரான சவுந்தர்யா ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.
கோச்சடையான் திரைப்படம் விழாவில் திரையிடப்படுவதற்கு முன் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் வேறு சில பணிக்காக பெங்களூரு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தொகுப்பாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த், "இந்த படத்தின் மூலம் எனக்கு சர்வதேசத் திரைப்பட விழாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் நான் சினிமாவுக்கு அறிமுகமானதை பெருமையாக கருதுகிறேன். எனது தந்தை இங்கு இல்லை. இந்தியாவில் முதன்முறையாக பர்ஃபார்மன்ஸ் கேட்ப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு கொண்டுவர அவர் துணையாக இருந்தார்" என்றார்.