Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினி உய்யாவோ... சிவாஜி படத்துக்காக ஸ்பெயினில் எடுக்கப்பட்டு வரும் பாடல் காட்சிகளில் ரஜினி மிக மிக வித்தியாசமானகெட்-அப்களில் வந்து அசத்துகிறார்.வெள்ளை முடி, பிங்க் ஜெர்கின் என ஒரு காட்சியில் ஷ்ரேயாவுடன் ஆடும் ரஜினி, அடுத்த காட்சியில் நெகுநெகுவென தோள் வரை வளர்ந்த பிரவுன் நிற பங்க் முடியுடன், பிளாக்ஸ் அணியும் மிக வித்தியாசமானஉடைகள், பாசி, மணிகளுடன் ஆடிப் பாடுகிறார்.இது எப்டி இருக்கு? ரஜினி கேட்பது மாதிரி இருக்கிறது அவரது காஸ்ட்யூம்.ரஜினியை இந்தக் கோலத்தில் பார்த்த ஸ்பெயின்வாசிகள் பலருக்கும் ஆச்சரியம். இவர் யார்? ரொம்பவித்தியாசமா இருக்காரே என்று கேட்டவாரே சூட்டிங் ஸ்பாட்டில் மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.அவர்களிடம் ரஜினியின் மகாத்மியம் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டபோது பலரும் ரஜினியுடன் படம் எடுத்துக்கொண்டதோடு ஆட்டோகிராப்பும் வாங்கிச் சென்றுள்ளனர்.தமிழகம், ஆந்திராவில் சூட்டிங்கை மிக மிக ரகசியமாக நடத்திய ஷங்கருக்கு ஸ்பெயினில் அது முடியவில்லை.சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே ஆளாளுக்கு கேமராக்களுடன் ரஜினியை சுட்டு எடுத்துவிட்டார்களாம்.அத்தோடு விடவில்லை ரஜினியைப் பற்றி ஸ்பெயின் நாட்டு பத்திரிக்கைகள், இணையத் தளங்களிலும் கூடசெய்திகள் போட ஆரம்பித்துவிட்டார்கள்.ஸ்பெயினில் கடந்த ஒரு வாரமாக எடுக்கப்பட்ட இந்தப் பாடல், சகாரா பூக்கள் பூக்குதே என்று தொடங்கும்பாடலாம். ரகுமான் உச்சபட்ச டிரம்ஸ் பீட்டுக்கு ரஜினி இணையாக ஆடி போட்டுத் தாக்கிவிட்டாராம்.இந் நிலையில் மாமனார் ரஜினி, மருமகன் தனுஷ் (படம்-திருவிளையாடல்)ஆகியோருடன் ஒரே நேரத்தில் நடித்து அமர்க்களப்படுத்தி வரும் ஷ்ரேயா புதிய படம்ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்துள்ளதால் நிறையப் படங்கள் வந்து பெத்த ஆளாகிவிடுவோம் என்று எண்ணியிருந்தார் ஷ்ரேயா. ஆனால் எதிர்பார்த்தது போல பெரியஅளவில் வாய்ப்புகள் வரவில்லை. சிவாஜிக்கு முன்பே புக் ஆன திருவிளையாடல்மட்டுமே மிஞ்சியிருந்தது.இதனால் கொஞ்சம் போல ஷாக் ஆகி காணப்பட்டார் ஷ்ரேயா. ஆனால் இப்போதுபுதுப் படம் ஒன்று அவரைத் தேடி வந்துள்ளது.சேலம் சந்திரசேகரன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை வெங்கடேசன் இயக்குகிறார்.ஏய் பட தோல்வியினால் துவண்டு போயிருந்த வெங்கடேஷ், அதிலிருந்து மீண்டுஇந்தப் புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோ பரத்.கிட்டத்தட்ட கில்லி படத்தைப் பால இந்தப் படம் அதிரடியாக இருக்குமாம்.சிவாஜி, திருவிளையாடல் ஆகிய இரு படங்களையும் முடித்து விட்டே இதில்நடிப்பாராம் ஷ்ரேயா.
சிவாஜி படத்துக்காக ஸ்பெயினில் எடுக்கப்பட்டு வரும் பாடல் காட்சிகளில் ரஜினி மிக மிக வித்தியாசமானகெட்-அப்களில் வந்து அசத்துகிறார்.
வெள்ளை முடி, பிங்க் ஜெர்கின் என ஒரு காட்சியில் ஷ்ரேயாவுடன் ஆடும் ரஜினி, அடுத்த காட்சியில் நெகுநெகுவென தோள் வரை வளர்ந்த பிரவுன் நிற பங்க் முடியுடன், பிளாக்ஸ் அணியும் மிக வித்தியாசமானஉடைகள், பாசி, மணிகளுடன் ஆடிப் பாடுகிறார்.
இது எப்டி இருக்கு? ரஜினி கேட்பது மாதிரி இருக்கிறது அவரது காஸ்ட்யூம்.
ரஜினியை இந்தக் கோலத்தில் பார்த்த ஸ்பெயின்வாசிகள் பலருக்கும் ஆச்சரியம். இவர் யார்? ரொம்பவித்தியாசமா இருக்காரே என்று கேட்டவாரே சூட்டிங் ஸ்பாட்டில் மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
அவர்களிடம் ரஜினியின் மகாத்மியம் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டபோது பலரும் ரஜினியுடன் படம் எடுத்துக்கொண்டதோடு ஆட்டோகிராப்பும் வாங்கிச் சென்றுள்ளனர்.
தமிழகம், ஆந்திராவில் சூட்டிங்கை மிக மிக ரகசியமாக நடத்திய ஷங்கருக்கு ஸ்பெயினில் அது முடியவில்லை.சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே ஆளாளுக்கு கேமராக்களுடன் ரஜினியை சுட்டு எடுத்துவிட்டார்களாம்.
அத்தோடு விடவில்லை ரஜினியைப் பற்றி ஸ்பெயின் நாட்டு பத்திரிக்கைகள், இணையத் தளங்களிலும் கூடசெய்திகள் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஸ்பெயினில் கடந்த ஒரு வாரமாக எடுக்கப்பட்ட இந்தப் பாடல், சகாரா பூக்கள் பூக்குதே என்று தொடங்கும்பாடலாம். ரகுமான் உச்சபட்ச டிரம்ஸ் பீட்டுக்கு ரஜினி இணையாக ஆடி போட்டுத் தாக்கிவிட்டாராம்.
இந் நிலையில் மாமனார் ரஜினி, மருமகன் தனுஷ் (படம்-திருவிளையாடல்)ஆகியோருடன் ஒரே நேரத்தில் நடித்து அமர்க்களப்படுத்தி வரும் ஷ்ரேயா புதிய படம்ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்துள்ளதால் நிறையப் படங்கள் வந்து பெத்த ஆளாகிவிடுவோம் என்று எண்ணியிருந்தார் ஷ்ரேயா. ஆனால் எதிர்பார்த்தது போல பெரியஅளவில் வாய்ப்புகள் வரவில்லை. சிவாஜிக்கு முன்பே புக் ஆன திருவிளையாடல்மட்டுமே மிஞ்சியிருந்தது.
இதனால் கொஞ்சம் போல ஷாக் ஆகி காணப்பட்டார் ஷ்ரேயா. ஆனால் இப்போதுபுதுப் படம் ஒன்று அவரைத் தேடி வந்துள்ளது.
சேலம் சந்திரசேகரன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை வெங்கடேசன் இயக்குகிறார்.
ஏய் பட தோல்வியினால் துவண்டு போயிருந்த வெங்கடேஷ், அதிலிருந்து மீண்டுஇந்தப் புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோ பரத்.
கிட்டத்தட்ட கில்லி படத்தைப் பால இந்தப் படம் அதிரடியாக இருக்குமாம்.
சிவாஜி, திருவிளையாடல் ஆகிய இரு படங்களையும் முடித்து விட்டே இதில்நடிப்பாராம் ஷ்ரேயா.