Don't Miss!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- Automobiles ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Sports முதல் பந்திலேயே சிக்ஸ்.. யாருப்பா தம்பி நீ.. இப்படி அடிக்கிற.. கங்குலி ரியாக்சனை பாருங்க!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ராணாவுக்கு சிறுநீரக கோளாறா, சிங்கப்பூரில் சிகிச்சையா?: உண்மை என்ன?
ஹைதராபாத்:
பாகுபலி புகழ் ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
நடிகர் ராணா சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுவதாகவும் அவர் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனையா என்று திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
சார்
ராணாவின் தம்பி அபிராம் பட வாய்ப்பு கொடுப்பதாக வாக்களித்து தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீ ரெட்டி குற்றம்சாட்டியதுடன் புகைப்படங்களையும் வெளியிட்டார். இந்நிலையில் அவர் ராணாவின் நிலை குறித்து அறிந்து சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ராணா சாரின் உடல்நலப் பிரச்சனை குறித்து அறிந்து கவலையாக உள்ளது. அது சிறிய பிரச்சனையாக இருக்கும் என்று நம்புகிறேன். சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அபிராம்
முன்னதாக ராணாவை பாவா என்ற ஸ்ரீ ரெட்டி தற்போது சார் என்று குறிப்பிட்டிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது. தம்பி மீது பாலியல் புகார் தெரிவித்துவிட்டு அண்ணனுக்காக கவலைப்படுகிறாரா ஸ்ரீ ரெட்டி என்றே அனைவரும் வியக்கிறார்கள்.
ராணா
எனக்கு சிறுநீரக பிரச்சனை எல்லாம் கிடையாது. அது வெறும் வதந்தி. ரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளதால் கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் உள்ளது. மற்றபடி நான் நலமாக உள்ளேன் என்று ராணா விளக்கம் அளித்துள்ளார்.
பிசி
ராணா தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் பிசியாக உள்ளார். ராணா முதன் முதலாக மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் அவர் திருவிதாங்கூர் மன்னராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.