ரஜினியின் அரிய புகைப்படங்கள்: மிஸ் பண்ணிடாதீங்க
Recommended Video

சென்னை: ரஜினிகாந்தின் அரிய புகைப்படங்களை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள்.
பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜிராவ் கெய்க்வாட் ரஜினிகாந்தாக மாறி சூப்பர் ஸ்டாராகிவிட்டார். சினிமாவில் பெரிய இடத்திற்கு வந்த அவர் தற்போது அரசியலுக்கு வர உள்ளார்.
தனிக்கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போகிறார்.

புகைப்படம்
ரஜினிகாந்தின் அரிய புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள். காலை வணக்கம் சொல்வதில் இருந்து இரவு தூங்கப் போகும் வரை ரஜினியின் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள்.

அரிய புகைப்படம்
ரஜினி சிறுவனாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். சிறுவனாக ரஜினி வித்தியாசமாக உள்ளார்.

அரசியல்
இந்த புகைப்படத்தில் இருப்பது சத்தியமாக ரஜினிகாந்தே தான். அவர் தற்போது தனிக்கட்சி துவங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ரஜினி அரசியலுக்கு வரும் குஷியில் உள்ளனர் அவரின் ரசிகர்கள்.
ரசிகர்கள்
எங்கள் சூப்பர் ஸ்டார் ரொம்ப எளிமையானவர் என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். டை அடிக்காமல் வெளியே வர வெட்கப்பட மாட்டார்.

பேசவில்லையே
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது வாய் திறக்காத கமல் ஹாஸனும், ரஜினிகாந்தும் தற்போது அரசியலுக்கு வருவது ஏன் என்று நெட்டிசன்கள் பல நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தட்டு
நண்பர்களுடன் வெளியே செல்லும்போது சாதாரண ஆள் போன்று வேட்டி, சட்டை அணிந்து, தலையில் துண்டை கட்டிக் கொண்டு இருப்பது ரஜினியின் வழக்கம்.


Click it and Unblock the Notifications











