Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
என்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவேங்க.. ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கல! - நடிகர் உதயா
2000-ஆண்டில் திருநெல்வேலி என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கிறதா... அந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர்தான் உதயா. பிரபல தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன். இயக்குநர் விஜய்யின் அண்ணன்.
இந்த பதினான்கு ஆண்டுகளில் அவரும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ராரா என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்து நடித்தார். இப்போது ஆவிகுமார் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
நாளை பிறந்த நாள் கொண்டாடும் உதயா, அதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்து, சினிமா கேரியரில் தான் எடுத்திருக்கும் புதிய முடிவைச் சொன்னார்.
அதாவது இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிப்பதில்லை.. கிடைக்கிற நல்ல வேடங்களில் நடிப்பதுதான் அந்தப் புது முடிவாம்.
அவர் மேலும் கூறுகையில், "ஆவி குமார் ஒரு வித்தியாசமான கதை. என் வேடமும் இன்னும் வித்தியாசமாக இருக்கும்.
வெறும் பேய்ப்படம் என்று சொல்லிவிட முடியாது. அதைத் தாண்டி, நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும்.
எனக்குன்னு ஒரு இடம் வேணும் சினிமாவில. அது ஹீரோன்னு இல்ல... எந்த நல்ல வேடமாக இருந்தாலும் ஓகே. வில்லனா கூட நடிக்க தயார்," என்றார்.
இயக்குநர் விஜய்யின் காதல் திருமணம் பற்றிக் கேட்டபோது, "தம்பி காதல் விவகாரம் எங்களுக்கு முன்னாலேயே தெரியும். எங்கள் வீட்டில் முதன் முதலில் காதல் திருமணம் செய்யப்போவது அவன்தான்," என்றார் உதயா.