Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவேங்க.. ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கல! - நடிகர் உதயா
2000-ஆண்டில் திருநெல்வேலி என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கிறதா... அந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர்தான் உதயா. பிரபல தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன். இயக்குநர் விஜய்யின் அண்ணன்.
இந்த பதினான்கு ஆண்டுகளில் அவரும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ராரா என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்து நடித்தார். இப்போது ஆவிகுமார் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
நாளை பிறந்த நாள் கொண்டாடும் உதயா, அதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்து, சினிமா கேரியரில் தான் எடுத்திருக்கும் புதிய முடிவைச் சொன்னார்.
அதாவது இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிப்பதில்லை.. கிடைக்கிற நல்ல வேடங்களில் நடிப்பதுதான் அந்தப் புது முடிவாம்.
அவர் மேலும் கூறுகையில், "ஆவி குமார் ஒரு வித்தியாசமான கதை. என் வேடமும் இன்னும் வித்தியாசமாக இருக்கும்.
வெறும் பேய்ப்படம் என்று சொல்லிவிட முடியாது. அதைத் தாண்டி, நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும்.
எனக்குன்னு ஒரு இடம் வேணும் சினிமாவில. அது ஹீரோன்னு இல்ல... எந்த நல்ல வேடமாக இருந்தாலும் ஓகே. வில்லனா கூட நடிக்க தயார்," என்றார்.
இயக்குநர் விஜய்யின் காதல் திருமணம் பற்றிக் கேட்டபோது, "தம்பி காதல் விவகாரம் எங்களுக்கு முன்னாலேயே தெரியும். எங்கள் வீட்டில் முதன் முதலில் காதல் திருமணம் செய்யப்போவது அவன்தான்," என்றார் உதயா.