ரஜினி உடல்நிலை பற்றி திடீர் பரபரப்பு... ரசிகர்கள் பதட்டம்!

ரஜினி மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் அந்த வதந்தி.
இதனால் ஏராளமான ரசிகர்கள் பதட்டத்துடன் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடுநோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். தொலைபேசியில் விசாரித்த வண்ணமிருந்தனர். பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து கேட்டனர்.
உடனடியாக இதுகுறித்து, ரஜினியின் இல்லத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
"ரஜினி சார் இப்போது பூரண நலத்துடன் வீட்டில் தேர்தல் முடிவுகளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பழையபடி படப்பிடிப்புக்குச் செல்வார். வதந்திகளை நம்ப வேண்டாம்", என்றனர்.
ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் அகமது கூறுகையில், "ரஜினி சார் நலமுடன் உள்ளார். தேவையின்றி இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி ரசிகர்களை பதட்டத்துக்குள்ளாக்குகின்றனர் சிலர். இந்த விஷமத்தனத்தை நம்ப வேண்டாம்", என்று கேட்டுக் கொண்டார்.
ஒரே வாரத்தில் ரஜினி இரு முறை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொண்டதாலேயே, இந்த மாதிரி வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











