Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எஸ் 3 ரிலீஸ் தள்ளிப் போனதற்கு டப்பு லேதண்டி, குடும்பம் காரணமாம்!
ஹைதராபாத்: எஸ் 3 படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள எஸ் 3 படம் நவம்பரில் ரிலீஸாகும் என்று கூறினார்கள். பின்னர் டிசம்பர் 16ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரிலீஸ் தேதி டிசம்பர் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மோடியின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் கையில் பணம் இல்லாமல் திண்டாடுவதால் எஸ் 3 ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கும் என்று பேசப்பட்டது.
படத்தின் தெலுங்கு பதிப்பான எஸ் 3 யமுடுவின் செய்தியாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் இன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட சூர்யா கூறுகையில்,
ராம் சரணின் த்ருவா படம் எங்கள் குடும்ப படம் போன்று. அந்த படத்தின் ரிலீஸுக்காக தான் எஸ் 3 படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. ராம் சரணுக்கு இது முக்கியமான படம். அவருக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.
ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கே த்ருவா என்பது குறிப்பிடத்தக்கது. த்ருவா வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது.