தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு சல்மான்கான் வாழ்த்து

அபிஷேக்கை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சல்மான் கானை காதலித்து வந்தார். பின்னர் விவேக் ஓபராயுடனும் பழகி வந்தார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தற்போது கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து அவருக்கு சல்மான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அபிஷேக் பச்சனுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அபிஷேக், ஐஸ்வர்யாவை நான் வாழ்த்துகிறேன். மீண்டும் அமிதாப் பச்சன் தாத்தாவாகப் போவது மகிழ்ச்சி தருகிறது என்றார்.
1999ம் ஆண்டு சல்மான்கானுடன் பழக ஆரம்பித்தார் ஐஸ்வர்யா. பின்னர் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் உருவானது. சல்மான் கான் முரட்டுத்தனமாகவும், மோசமாகவும் நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து 2002ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











