Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கார் விபத்து வழக்கு: சல்மான் கானை நெருங்கிக் கொண்டிருக்கும் சிறை தண்டனை
மும்பை: 2002ல் காரை சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தியபோது பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் இருந்தார் என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் காரை ஓட்டிச் சென்ற நடிகர் சல்மான் கான் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றிவிட்டு சென்றார். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கராத் நீதிமன்றத்தில் கூறுகையில்,
சல்மான்
சம்பவம் நடந்த அன்று சலல்மான் கானும், அவரது நண்பர் கமால் கானும் காரில் இருந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு காயம் அடைந்தவர்களுக்கு உதவக் கூட முன்வராமல் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
குடிபோதை
விபத்தை ஏற்படுத்தியபோது சல்மான் கான் தான் காரை ஓட்டியுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் அவரால் காரை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதற்கு ஆதாரங்களும் உள்ளன.
ரத்த மாதிரி
சல்மானிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரியில் 100 மில்லி ரத்தத்தில் 62 மில்லிகிராம் மது இருந்தது. அவரது ரத்த மாதிரி பரிசோதனையில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை.
கார்
காரில் மெக்கானிக்கல் கோளாறு ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கும் என்கிறார்களே. அதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் காரை பரிசோதனை செய்த வாகன போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அது நல்ல நிலைமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பொய்
சல்மான் கானின் டிரைவர் அசோக் சிங் சம்பவம் நடந்த அன்று நான் தான் காரை ஓட்டினேன் என்று நீதிமன்றத்தில் கூறியது பொய் ஆகும். பொய் சாட்சி சொன்ன அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கராத்.