மான் வேட்டை வழக்கில் சிறைக்குப் போகும் சல்மான்!

1988-ல் "ஹம் சாத்சாத் ஹைய்ன்" என்ற படப்பிடிப்பின் போது, நடிகைகளுடன் காட்டுக்கு வேட்டையாடப் போன சல்மான்கான் இரு மான்களை சுட்டுக் கொன்றார்.
இதற்கு விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அவர் சுட்ட மான்கள் அந்தப் பகுதி வழங்குடி மக்களின் வணக்கத்துக்குரிய விலங்காக இருந்தது. தொடர்ந்து சல்மான்கான் மீது வழக்கும் தொடரப்பட்டது. பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இவ்வழக்கை ராஜஸ்தான் உயர்நீதி்மன்றம் தற்போது விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
வனவிலங்குகள் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும். விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் திக்திக் மனதுடன் காத்திருக்கிறார் சல்மான்!


Click it and Unblock the Notifications











