மான் வேட்டை வழக்கில் சிறைக்குப் போகும் சல்மான்!

By Shankar

Salman khan
மும்பை: ராஜஸ்தானில் எண்பதுகளில் ஒரு இந்திப் படப்பிடிப்பின்போது நடிகர் சல்மான்கான் இரு மான்களைச் சுட்டுக் கொன்று, சக நடிகைகளுடன் சமைத்து விருந்துண்டதும், அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டு வெளியில் வந்ததும் நினைவிருக்கிறதா... இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த வழக்கில் சல்மானுக்கு தண்டனை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

1988-ல் "ஹம் சாத்சாத் ஹைய்ன்" என்ற படப்பிடிப்பின் போது, நடிகைகளுடன் காட்டுக்கு வேட்டையாடப் போன சல்மான்கான் இரு மான்களை சுட்டுக் கொன்றார்.

இதற்கு விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அவர் சுட்ட மான்கள் அந்தப் பகுதி வழங்குடி மக்களின் வணக்கத்துக்குரிய விலங்காக இருந்தது. தொடர்ந்து சல்மான்கான் மீது வழக்கும் தொடரப்பட்டது. பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இவ்வழக்கை ராஜஸ்தான் உயர்நீதி்மன்றம் தற்போது விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

வனவிலங்குகள் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும். விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் திக்திக் மனதுடன் காத்திருக்கிறார் சல்மான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X