சல்மான் கானுக்கு ரூ.100 கோடி சம்பளம் தர தயாராகும் பாலிவுட்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் காட்டில் பண மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. சல்மான் கானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று ரிலீஸாகி ரூ.100 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் அவர் முன்னாள் காதலி கத்ரீனா கைபுடன் சேர்ந்து நடித்த ஏக் தா டைகர் படம் சுதந்திர தினதன்று ரிலீஸனது. ரிலீஸான 5 நாட்களிலேயே ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.
இந்நிலையில் ரிலீஸான 2 வாரத்திற்குள் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் ஆமீர் கானின் 3 இடியட்ஸ் படத்திற்கு அடுத்தபடியாக அதிகம் வசூல் செய்துள்ள படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
அவரது இந்த அபார வெற்றியைப் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர் ரமேஷ் தாராணி தனது புதிய படத்தில் நடிக்க சல்மானுக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது உண்மை என்றால் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சல்மான் கான் தான்.
தனது திரைப்பட பள்ளியான விஸ்லிங் உட்ஸ் இன்டர்நேஷனலை கவனிக்கும் பொருட்டு டைரக்ஷனில் இருந்து ஒதுங்கி இருந்த சுபாஷ் கை தற்போது மீண்டும் இயக்கத்தில் குதித்துவிட்டார். அவர் சல்மான் கானை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். அந்த படத்திற்காக அவர் சல்மானுக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுக்க தயாராக உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் மீண்டும் படங்கள் எடுக்கவிருக்கிறேன். இரண்டு படங்கள் எடுக்கிறேன். ஒரு படத்திற்கு சல்மான் கானை ஒப்பந்தம் செய்துள்ளேன். அந்த படம் அடுத்த ஆண்டு துவங்கும். மற்றொரு படம் இந்த ஆண்டு துவங்கும். சல்மான் கான் ரூ.100 கோடி சம்பளம் கேட்டால் அதை சந்தோஷமாகத் தருவேன். எங்கள் படம் ரூ.200 கோடி வசூல் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
வாண்டட் படத்திற்கு பிறகு மக்கள் சல்மானை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்க்கின்றனர். அப்படி இருக்கையில் அவரை ரொமான்டிக் படமான யுவராஜில் நடிக்க வைத்தது எங்கள் தவறு தான். தற்போது எடுக்கும் படம் ஆக்ஷன் கலந்த மசாலா படமாக இருக்கும் என்றார்.
கடந்த 2008ம் ஆண்டில் சல்மான், கத்ரினாவை வைத்து சுபாஷ் கை எடுத்த யுவராஜ் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











