பழைய புடைவையில் திருமணம் செய்துகொள்ளப்போகும் சமந்தா!
சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இரு குடும்பத்தாரும் ஸாரி... நாகார்ஜுனா குடும்பத்தினர் இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகளை கோலாகலமாக செய்துவருகிறார்கள். சமந்தாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முன்பே சரியான உறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் திருமண நிகழ்ச்சிகளில் ஒருநாள் முழுக்க சமந்தா பழைய புடைவையில் தான் காட்சியளிக்கப்போகிறாராம். ஏன் தெரியுமா? இந்த பழைய புடைவை நாகசைதன்யாவின் பாட்டியின் பாரம்பர்ய திருமண சேலையாம். எனவே குடும்ப வழக்கப்படி அந்த சேலையை அணியவிருக்கிறாராம் சமந்தா.
இதற்காக அந்த பழைய புடைவையை பல லட்ச ரூபாய் செலவில் பாலீஷ் செய்துவருகிறார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications