twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்ளீஸ்...என்னை என் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்: சஞ்சய் தத் வேண்டுகோள்

    |

    புனே: 14 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ள நடிகர் சஞ்சய் தத், பத்திரிக்கையாளர்களிடம் 'தயவுசெய்து என்னை என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க விடுங்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்

    மும்பை குண்டுவெடிப்பில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத், காலில் வலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக 14 நாட்கள் பரோலில் நேற்று எரவாடா சிறையிலிருந்து வெளியே வந்தார்.

    அங்கிருந்து மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு கார் மூலம் சென்றார் சஞ்சய்.

    சுதந்திரப்பறவை....

    சுதந்திரப்பறவை....

    வரும் 16ம் தேதி மீண்டும் சஞ்சய் சிறைக்கு திரும்ப வேண்டும். எனவே இடைப்பட்ட நாட்களை தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கழிக்கத் திட்டமிட்டுள்ளாராம் சஞ்சய்.

    பரோல்....

    பரோல்....

    மூன்று மாதங்களுக்கு முன்பே, பரோலுக்காக சஞ்சய் விண்ணப்பித்திருந்தார். தற்போது அவரது சகோதரி நம்ரதா கட்டிய இருபதாயிரம் ரூபாய்க்கான பணையத் தொகை மூலமே சஞ்சய் வெளியே வந்துள்ளதாகத் தெரிகிறது.

    வெற்றித் திலகம்....

    வெற்றித் திலகம்....

    சிகப்பு வண்ண சட்டை அணிந்து, நெற்றியில் திலகமிடப்பட்டு வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டார் சஞ்சய்.

    நன்றி...

    நன்றி...

    அதற்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சஞ்சய் தத், ‘சட்டத்தை நான் மதிக்கிறேன். அதேபோல், பத்திரிக்கையாளர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். அதாகப்பட்டது என்னை என் குடும்பத்தோடு கிடைத்துள்ள குறைந்த நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட உதவுங்கள். என் ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

    எடை குறைந்த சஞ்சய்...

    எடை குறைந்த சஞ்சய்...

    சஞ்சய் தத்தின் நண்பரும், படத் தயாரிப்பாளருமான மகேஷ் பட், சஞ்சய் தத் பரோலில் விடுதலையானது குறித்து கூறுகையில், ‘சஞ்சய் கிட்டத்தட்ட 14லிருந்து 15 கி வரை எடை குறைந்துள்ளார். இந்த 14 நாட்களில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்குமான சுதந்திரம் மிகவும் அவசியமானது' எனத் தெரிவித்தார்.

    English summary
    Actor Sanjay Dutt was on Tuesday released on leave of furlough for 14 days by the state prison department for the first time since his final incarceration. Dutt, who is undergoing a 42-month sentence under the Arms Act, was released from the Yerwada central prison at 9.30am. He left straightway for Mumbai by car.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X