மகளின் பாலிவுட் ஆசைக்கு சஞ்சய் தத் 'தடா'!

சஞ்சய் தத்துக்கும், அவரது முதல் மனைவி ரிச்சா ஷர்மாவுக்கும் பிறந்த மகள் த்ரிஷாலா(22). தந்தை வழியில் பாலிவுட்டில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அவர் உனக்கு நடிப்பெல்லாம் வேண்டாம் ஒழுங்காகப் படித்த படிப்பை வைத்து முன்னேறப் பாரு என்று கூறிவிட்டாராம்.
இது குறித்து சஞ்சய் ஒரு நாளிதழுக்கு கூறியதாவது,
எனது மகளை படங்களில் நடிக்க ஊக்குவிக்க மாட்டேன். இது தத் குடும்பத்தில் நடக்காது. எனது சகோதரிகள், அவர்களது பிள்ளைகள் படத்தில் நடிக்கலாம். ஆனால் எனது தந்தை எதிர்பார்த்தது இதுவல்ல. எனது மகள் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாள். அவள் தடயவியல் படித்திருக்கிறாள். அதிலே அவளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
உங்கள் கருத்தை த்ரிஷாலா ஏற்கவில்லை என்றால் என்று கேட்டதற்கு, அவள் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதற்கு முன்பு பொதுவில் தந்தைக்கும், மகளுக்கும் இடையே பிரச்சனை வந்தது. முதலில் த்ரிஷாலாவுக்கு சஞ்சயின் 2-வது மனைவி மான்யதாவை பிடிக்கவில்லை.
ஒரு பேட்டியின்போது த்ரிஷாலா கூறுகையில், இறுதி முடிவு எடுக்க வேண்டியது நான் தான். எனக்கு எது சிறந்தது, மகிழ்ச்சியளிகக் கூடியது என்று நான் நினைக்கிறேனோ, அதைத் தான் செய்வேன் என்றார்.
சஞ்சய் வீட்டில் விரைவில் பிரச்சனை வரும்போல் இருக்கிறதே...!


Click it and Unblock the Notifications











