Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எலும்பும் தோலுமாக பார்க்க பாவமாக இருக்கும் சந்தானம்: ஏன் தெரியுமா?
சென்னை: அண்மையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சந்தானத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நகைச்சுவை செய்து கோடிகளில் சம்பாதித்து ஹீரோக்களே பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஜம்முன்னு வாழ்ந்தவர் சந்தானம். தற்போதும் ஜம்முன்னு தான் இருக்கிறார் ஆனால் ஹீரோவாக.
ஹீரோவான பிறகு இனி காமெடியனாக பிற ஹீரோக்களின் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் சந்தானம். புதுமுகம் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள அக்யூஸ்ட் நம்பர் ஒன் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
மேலும் அவர் நடித்து திரைக்கு வராமல் தள்ளித் தள்ளிப் போன சர்வர் சுந்தரம் படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலீஸ்
புதுமுகம் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள அக்யூஸ்ட் நம்பர் ஒன் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. மேலும் அவர் நடித்து திரைக்கு வராமல் தள்ளித் தள்ளிப் போன சர்வர் சுந்தரம் படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானம்
சந்தானம் தனது ரசிகர் மன்ற தலைவர் நடத்தும் கால் டாக்சி சேவையின் துவக்க விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் சந்தானம் எலும்பும், தோலுமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நல்லா இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டாரே, உடம்புக்கு ஏதாவது சரியில்லையோ என்று நினைத்தனர். இந்நிலையில் அவரிடமே இது குறித்து கேட்கப்பட்டது.
டகால்டி
நான் நலமாக உள்ளேன். நான் நடிக்கும் டகால்டி படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளேன். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை. வெயிட் போட வேண்டும் என்றால் மூன்று நேரமும் பிரியாண சாப்பிட்டால் போச்சு என்று தன் ஸ்டைலில் தெரிவித்தார் சந்தானம். டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர்கள் அது சர்கார் போஸ்டர் போன்று இருப்பதாக விமர்சித்தார்கள். ஒரே நாளில் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு டகால்டி என்கிற தலைப்பு ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
ராணா
சந்தானத்தை போன்று நடிகர் ராணாவும் படத்திற்காக தனது உடல் எடையை ஒரேயடியாக குறைத்து எலும்புக்கூடு போன்று இருக்கிறார். ஒல்லிக்குச்சியாக இருக்கும் ராணா தாடி, மீசையுடன் பார்க்க பரிதாபமாக உள்ளார். சந்தானம், ராணா ஆகியோரை பார்த்தால் சாப்பிட்டு பல நாட்கள் ஆனவர்கள் போன்று தெரிகிறார்கள். அவர்களுக்கு நல்ல சாப்பாட்டு வாங்கிக் கொடுக்க வேண்டும் போன்று உள்ளது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!