மீண்டும் சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் சந்தானம்!
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா', ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' ஆகிய படங்களைத் தயாரித்து, ஹீரோவாகவும் நடித்து வெற்றியை ருசித்த சந்தானம், மூன்றாவது சொந்தப் படத்தை ஆரம்பிக்கிறார்.
பபரபரவென மற்ற படங்களில் நடித்துக் கொண்டே, இந்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்.

ஆஷ்னா சாவேரி - அகிலா கிஷோர்
அவரது ஹேண்ட் மேட் பிலிம்ஸ் பேனரிலேயே இந்தப் படத்தைத் தயாரிக்கும் சந்தானம், தனக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி மற்றும் அகிலா கிஷோரை ஒப்பந்தம் செய்துள்ளார்.

ரஹ்மான் மாணவன்
இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக கோபிநாத் அறிமுகமாகிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பயின்ற சந்தோஷ் தயாநிதி அறிமுகமாகிறார்.

இரட்டையர்
படத்தின் இயக்குநர்களாக முருகா-ஆனந்த் என்கிற இரட்டையர் இயக்குகிறார்கள். இவர்கள் தொலைக்காட்சியில் பிரபலமான லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கியவர்கள். சந்தானத்தின் பழைய சகாக்கள்.

இது சந்தானம் படம்
படம் பற்றி முருகா - ஆனந்த் கூறுகையில், "இன்று எங்களை இயக்குனராக உயர்த்திய சந்தானம் சாருக்கு நாங்கள் என்றென்றும் கடன் பட்டிருக்கிறோம். இப்படம் முழுக்க முழுக்க சந்தானம் படமாகவே இருக்கும். அவர் ரசிகர்கள் அவரிடம் என்ன விரும்புகிறார்களோ அதை மட்டுமே நாங்கள் தரப் போகிறோம்," என்றனர்.


Click it and Unblock the Notifications











