twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்கார் பிரச்சனை-போன் போட்ட பாக்யராஜ்: ஒரேயொரு வார்த்தை சொன்ன விஜய்

    By Siva
    |

    Recommended Video

    சர்கார் கதை திருட்டு விவகாரம், பாக்யராஜிடம் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?- வீடியோ

    சென்னை: சர்கார் விஷயத்தில் விஜய் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

    சர்கார் கதை திருட்டு பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளது. பட ரிலீஸில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் ரசிகர்கள் தன் மகனை கடுமையாக விமர்சித்ததாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    சர்கார் கதை என்னுடையது, வதந்திகளை நம்ப வேண்டாம்: முருகதாஸ்சர்கார் கதை என்னுடையது, வதந்திகளை நம்ப வேண்டாம்: முருகதாஸ்

    முருகதாஸ்

    முருகதாஸ்

    கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். எழுத்தாளர் சங்கத்தில் வருண் ராஜேந்திரனும், ஏ. ஆர். முருகதாஸ் ஆகிய இருவருமே உறுப்பினர்கள் தான். அவர்களுக்கு இடையே கதை தொடர்பாக சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கள்ள ஓட்டுக்கு எதிராக ஹீரோ போராடும் கதையை தான் படமாக்கி ரிலீஸுக்கு கொண்டு வந்துள்ளார் முருகதாஸ். வருண் ராஜேந்திரன் சர்கார் படத்தின் கதை பற்றி பேப்பரில் படித்துவிட்டு அது என் கதை என்று கூறி சங்கத்தை தொடர்பு கொண்டார்.

    மறுப்பு

    மறுப்பு

    முருகதாஸுடன் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்த வரை வெளியே சமரசம் செய்யலாம் என்று முயற்சி செய்தேன். அவருக்கு கொஞ்சம் மனக்கசப்பு இருந்தது. நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கதையில் நான் எப்படி மற்றவர்களை சேர்க்க முடியும் என்று முருகதாஸ் வருத்தப்பட்டார். இதே கருவை வருண் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தித்து எழுதியுள்ளார். அதனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று முருகதாஸிடம் கூறினேன். இல்லை சார், என்னை தப்பா பேசிவிடுவார்கள் என்றார். இரண்டு படங்களின் கருவும் ஒன்றாக இருப்பதால் அவருக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நான் முருகதாஸிடம் கூறினேன்.

    சம்மதம்

    சம்மதம்

    முதலில் தயங்கிய முருகதாஸ் பின்னர் வருணுக்கு அங்கீகாரம் கொடுக்க சம்மதித்தார். அதனால் பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டது. இந்த விஷயத்தில் அதிகம் காயப்பட்டது நான் தான். ஏனென்றால் என் மகனே விஜய்யின் தீவிர ரசிகனாக இருக்கும்போது நான் எப்படி இப்படி எடுத்துக் கொண்டேன் என்று சொல்லும்போது பொறுப்புள்ள தலைவர் என்பதால் என் மனதுக்கு நியாயம் என பட்டதற்கு கடைசி வரை ஆதரவாக நிற்க வேண்டும் என்பதால் நான் தான் அதிகம் பாதிக்கப்பட்டேன்.

    விமர்சனம்

    விமர்சனம்

    இதை விஜய் ரசிகர்கள் நிறைய பேர் புரிந்து கொள்ளவில்லை. பாக்யராஜ் அந்த படத்திற்கு எதிராக உள்ளார் என்று நினைத்தனர். எனக்கு முருகதாஸ் தான் நல்ல பழக்கமே தவிர வருண் அல்ல. இதை புரிந்து கொள்ளாமல் விஜய் ரசிகர்கள் என் மகனை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தனர். நான் விஜய்யை பாராட்டுகிறேன். இந்த பிரச்சனை குறித்து விஜய் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவருக்கு போன் செய்து கூறினேன்.

    பெருந்தன்மை

    பெருந்தன்மை

    அப்பொழுது விஜய் ஒரு வார்த்தை சொன்னது எனக்கு மிகவும் பிடித்தது. சார், என் படம், பார்த்து பண்ணுங்க என்று அவர் சொல்லவில்லை. சார், உங்க மனசுக்கு எது நியாயம் என்று படுகிறதோ அதை பண்ணுங்க. விஜய்யின் அந்த பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விஜய் ரசிகர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    English summary
    Director cum actor Bhagyaraj has appreciated Vijay's stand in connection with Sarkar story theft issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X