அப்பா செய்த காரியத்திற்காக வருத்தம் தெரிவித்த சாந்தனு பாக்யராஜ்
Recommended Video

சென்னை: அப்பா செய்த காரியத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார் சாந்தனு பாக்யராஜ்.
சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றுள்ளார் உதவி இயக்குனரான வருண் ராஜேந்திரன். இந்நிலையில் தனக்கு முன்பு அந்த ஸ்க்ரிப்படை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த வருணுக்கு கிரெடிட் கொடுத்து படத்தின்போது ஒரு கடிதத்தை 30 வினாடிகள் காண்பிக்க ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.
டைட்டில் கார்டில் கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.ஆர். முருகதாஸ் என்று போடுகிறார்கள். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
பாக்யராஜ்
சர்கார் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டதை அடுத்து படத்தின் காண்பிக்கப்பட உள்ள கடிதத்தை தன் தந்தை தான் எழுதியதாக நடிகர் சாந்தனு பாக்யராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு
சர்கார் படத்தின் கதையை அப்பா வெளியே சொன்னதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு.
கதை
அப்பா கதையை சொல்லியதில் மட்டுமே வருத்தமே தவிர !! அவர் கடமையை ஆற்றியதில் இல்லை !! #sarkar வெல்லும் @imKBRshanthnu

விஜய் ரசிகர்கள்
சர்கார் விவகாரம் தொடர்பாக விஜய் ரசிகர்கள் தனது மகன் சாந்தனுவை ட்விட்டரில் கடுமையாக விமர்சிப்பதாக கூறி வருத்தப்பட்டுள்ளார் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











