ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் சசிகுமார்!

சுப்ரமணியபுரம், நாடோடிகள் என சசிகுமாரின் நடிப்பில் அனைவரையும் கவர்ந்தவர் சசிகுமார். இவர் கடைசியாக நடித்த படம் நாடோடிகள். இயக்கிய படம் ஈசன்.
இப்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் போராளி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு புதிய படத்தை இயக்க உள்ளார்.
இதற்கிடையே, யுவன் யுவதி படத்துக்குப் பின் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் படம் ஒன்றின் கதையைக் கேட்ட சசிகுமாருக்கு, அந்தக் கதை பிடித்துவிட்டதால் நடித்த ஒப்புக் கொண்டுள்ளாராம்.
தனது இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு முன்பே இதில் அவர் நடிக்கக் கூடும் என்கிறார்கள்.
இந்தப் படங்கள் தவிர, மலையாளத்தில் மாஸ்டர்ஸ் எனும் படத்திலும் நடித்து வருகிறார் சசிகுமார்.
Comments


Click it and Unblock the Notifications