முடி துறந்த சத்யராஜ்!
டிசம்பருக்குள் படத்தை முடித்து, பொங்கலுக்குப் படத்தை வெளியிட ராஜசேகரன்திட்டமிட்டுள்ளார். படத்தில் நடித்து வருவது குறித்து சத்யராஜ் கூறுகையில்,
என்னை சும்மா தேர்ந்தெடுத்து விடவில்லை. எனது பழைய புகைப்படங்களைவாங்கிப் பார்த்து, நான் பொருத்தமானவன்தான் என்பதை உணர்ந்த பின்னரேபெரியார் வேடத்தில் நடிக்க என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.
பெரியார் பேசியதை டேப்பில் போட்டுப் பார்த்துக் கேட்டு அதை அப்படியே பேசப்போகிறேன். முன்னாடி பழனிக்கு அடிக்கடி போய் மொட்டை போடுவேன்.திருப்பதியில் கூட ஒருமுறை போட்டுள்ளேன்.
அதேபோல எனது உடலில் குறிப்பாக நெஞ்சில் மண்டிக் கிடக்கும் முடியையும்தினமும் ஷேவிங் செய்து அகற்றி விடுகிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக பெரியாராக மாறி வருகிறேன் என்றார் சத்யராஜ்.
முன்னதாக, பெரியார் படத்திற்கு ரூ. 95 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்தமுதல்வர் கருணாநிதியை அவரது சிஐடி காலனி வீட்டுக்குச் சென்று சந்தித்த தி.க.தலைவர் வீரமணி, சத்யராஜ், இயக்குனர் ஞானராஜசேகரன் ஆகியோர் நன்றிதெரிவித்துக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications