Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இனி 'நோ' லொள்ளு! - சத்யராஜ்
லொள்ளு ராஜ்யத்தில், தனிக்காட்டு ராஜாவாக பவனி வந்தவர் சத்யராஜ். எல்லோருக்கும் வயதான காலத்தில் வாய்ப்புகள் தட்டிப் போகும். ஆனால் சத்யராஜுக்கோ வாய்ப்புகள் வந்து குவிந்தன.
நக்கலும், நையாண்டியுமாக ஓடிக் கொண்டிருந்தவரைக் கூப்பிட்டு பெரியார் வேடத்தைக்கொடுத்து நடிக்க வைத்தனர். இனிமேல் பெரியார் என்றால் சத்யராஜ்தான் ஞாபகத்திற்கு வருவார் என்ற அளவுக்கு தத்ரூபமாக நடித்து கலக்கியிருந்தார் சத்யராஜ்.
பெரியார் படத்திற்குப் பிறகு திரையுலகைச் சேர்ந்த பலரும், திரையுலகைச் சேராதவர்களும், இனிமேல் லொள்ளு, ஜொள்ளு, அடிதடி கேரக்டர்களில் நடிக்க வேண்டாம் என்று சத்யராஜை அன்புடன் கேட்டுக் கொண்டனர். அவரும் அதுகுறித்து பரிசீலிப்பதாக கூறி வைத்தார்.
இருந்தாலும் இடையில் தங்கம் என்ற படத்தில் நடித்து வந்தார் சத்யராஜ். இதில் வழக்கமான சத்யராஜ் நடிப்புதான். இந்த நிலையில்தான் சத்யராஜின் மனை சுத்தமாக மாற்றியிருக்கிறது தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு.
இப்படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பும், மாதவ படையாச்சியாக தான் நடித்ததற்கு கிடைத்த பாராட்டுக்களும் சத்யராஜை நெகிழ வைத்துள்ளதாம்.
இதற்கு மேலும் தயங்கக் கூடாது, இனிமேல் விளையாட்டுத்தனமான கேரக்டர்களில் நடிக்கவே கூடாது, இதுபோன்ற நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு தீர்மானமாக வந்து விட்டாராம் சத்யராஜ்.