Don't Miss!
- Finance Adani: விதிமுறைகள் மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- News ஒரு நொடி தான்..நடுவானில் சிதறிய ஹெலிகாப்டர்கள்! உறைந்து போன மக்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பேயாக நடிக்க மறுத்து, மகனுக்காக ஒப்புக் கொண்ட சத்யராஜ்!
பெரியாரின் கொள்கைப்படி சாமி, பேய், பூதம் சமாச்சாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவந்த சத்யராஜ், தன் மகன் சிபிராஜுக்காக ஒரு படத்தில் பேயாகவே நடிக்கிறார்.
நாய்கள் ஜாக்கிரதை' வெற்றிக்குப் பிறகு சிபிராஜ் நடிக்கும் படம் ‘ஜாக்சன் துரை'. இப்படத்தை ‘பர்மா' படத்தை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார்.
சிபிராஜுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஹாலிவுட் நடிகர் ஷாசெரி தமிழுக்கு அறிமுகமாகிறார்.
ஜாக்சன் துரை படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 25 சதவிகித படப்பிடிப்பை முடித்துள்ளனர்.
இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது தந்தை சத்யராஜ் பேயாக நடிக்கிறார்.
பேய் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியபோது, முதலில் அதில் நடிக்க மறுத்து விட்டாராம். பின்னர், கதையின் முக்கியத்துவம் புரிந்து, பேயாக நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்.