தேர்தல் ஆணையர் சத்யராஜ் !!! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றுநினைக்கிறார்களோ, அவர்களுக்கே எனது ரசிகர்களின் வாக்கு என்று நடிகர் சத்யராஜ்கூறியுள்ளார்.இந்தத் தேர்தலில் தனது வாய்ஸ் யாருக்கும் இல்லை. விருப்பப்பட்டவர்களுக்குஓட்டுப் போட்டுக் கொள்ளலாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தெரிவித்து விட்டார்.இதனால் கடுப்பாகிப் போன ரசிகர்களில் ஒரு பிரிவினர் அதிமுகவுக்கு வாய்ஸ்கொடுத்து அங்கு போய்க் கொண்டுள்ளனர்.இந் நிலையில் சேலத்தில் உள்ள பிரியரத்னா திரையரங்குக்கு ஷூட்டிங்குக்காகவந்திருந்த நடிகர் சத்யராஜிடம் உங்களது ஆதரவு இந்த முறை யாருக்கு என்றுகேட்டபோது,இந்தப் படத்தில் நான் தேர்தல் ஆணையராக நடிக்கிறேன். இந்த சமயத்தில் இப்படிஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள், யார் ஆட்சிக்குவந்தால் நல்லது என்று யோசித்துப் பார்த்து அவர்களுக்கே எனது ரசிகர்கள்வாக்களிப்பார்கள்.நானும் அப்படியே வாக்களிப்பேன். எனவே சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் என்றுரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் ஓட்டுப் போடப் போவது எந்தக் கட்சியாகஇருந்தாலும் பரவாயில்லை, நல்ல வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான்முக்கியம்.சினிமாவில் தேர்தல் ஆணையராக நிடிக்கும் நான் நிஜமாவே அந்த பதவியில்இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? இப்போது உள்ள சட்ட விதிமுறைகள்தேர்தலை சுமூகமாக, சிரமம் இல்லாமல் நடத்தப் போதாது. எனவே அவற்றைகடுமையாக்க வேண்டும்.ஊர்வலம், பிரசாரம், பொதுக்கூட்டம் என அத்தனையையும் தடை செய்வேன். பத்திரிக்கைகள், டிவிக்கள் மூலம் மட்டும் தான் பிரசாரம் செய்ய வேண்டும் எனஉத்தரவு போடுவன். அப்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்காது,அவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது.இதெல்லாம் நான் தேர்தல் ஆணையராக வந்தால்தான் நடக்கும். ஆனால் அதற்கானவாய்ப்பே இல்லை என்பதால் அரசியல் கட்சிகள் பயப்படத் தேவையில்லை என்றுமுடித்தார் தனது வழக்கமான நக்கலோடு.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றுநினைக்கிறார்களோ, அவர்களுக்கே எனது ரசிகர்களின் வாக்கு என்று நடிகர் சத்யராஜ்கூறியுள்ளார்.
இந்தத் தேர்தலில் தனது வாய்ஸ் யாருக்கும் இல்லை. விருப்பப்பட்டவர்களுக்குஓட்டுப் போட்டுக் கொள்ளலாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தெரிவித்து விட்டார்.இதனால் கடுப்பாகிப் போன ரசிகர்களில் ஒரு பிரிவினர் அதிமுகவுக்கு வாய்ஸ்கொடுத்து அங்கு போய்க் கொண்டுள்ளனர்.
இந் நிலையில் சேலத்தில் உள்ள பிரியரத்னா திரையரங்குக்கு ஷூட்டிங்குக்காகவந்திருந்த நடிகர் சத்யராஜிடம் உங்களது ஆதரவு இந்த முறை யாருக்கு என்றுகேட்டபோது,
இந்தப் படத்தில் நான் தேர்தல் ஆணையராக நடிக்கிறேன். இந்த சமயத்தில் இப்படிஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள்.
வரும் சட்டசபைத் தேர்தலில் யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள், யார் ஆட்சிக்குவந்தால் நல்லது என்று யோசித்துப் பார்த்து அவர்களுக்கே எனது ரசிகர்கள்வாக்களிப்பார்கள்.
நானும் அப்படியே வாக்களிப்பேன். எனவே சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் என்றுரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் ஓட்டுப் போடப் போவது எந்தக் கட்சியாகஇருந்தாலும் பரவாயில்லை, நல்ல வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான்முக்கியம்.
சினிமாவில் தேர்தல் ஆணையராக நிடிக்கும் நான் நிஜமாவே அந்த பதவியில்இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? இப்போது உள்ள சட்ட விதிமுறைகள்தேர்தலை சுமூகமாக, சிரமம் இல்லாமல் நடத்தப் போதாது. எனவே அவற்றைகடுமையாக்க வேண்டும்.
ஊர்வலம், பிரசாரம், பொதுக்கூட்டம் என அத்தனையையும் தடை செய்வேன்.
பத்திரிக்கைகள், டிவிக்கள் மூலம் மட்டும் தான் பிரசாரம் செய்ய வேண்டும் எனஉத்தரவு போடுவன். அப்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்காது,அவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது.
இதெல்லாம் நான் தேர்தல் ஆணையராக வந்தால்தான் நடக்கும். ஆனால் அதற்கானவாய்ப்பே இல்லை என்பதால் அரசியல் கட்சிகள் பயப்படத் தேவையில்லை என்றுமுடித்தார் தனது வழக்கமான நக்கலோடு.


Click it and Unblock the Notifications