Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மானை வேட்டையாடிய வழக்கு: சல்மானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: மானை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த1998 ஆம் ஆண்டு ஹம் சாத் சாத் திரைப்படத்தின் படப்படிப்பின் போது, ஜோத்பூர் சென்றிருந்த அவர் இரண்டு மான்களை வேட்டையாடி கொன்றதாக குற்றசாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது.இதற்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதன் மீது இன்று நடைபெற்ற விசாரணையின்போது, நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மான்வேட்டையாடிய வழக்கில் சையிப் அலி கான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.