பிரியாணி, பொங்கலை அடுத்து 'தல' என்ன சமைக்கிறார் தெரியுமா?
சென்னை: பிரியாணி, பொங்கல் சமைத்த அஜீத் குமார் தற்போது என்ன சமைக்கிறார் தெரியுமா?
அஜீத் குமார் சமைப்பதில் வல்லவர் என்று அவருடன் பணியாற்றுபவர்கள் தெரிவித்துள்ளனர். ஹீரோக்கள் பலருக்கும் சமைக்கும் ஆசை இருந்தாலும் அவர்கள் படப்பிடிப்பில் அதை முயற்சி செய்வதில்லை. ஆனால் அஜீத் தயங்காமல் படப்பிடிப்பில் சமைத்து வருகிறார்.
அதிலும் மங்காத்தா படப்பிடிப்பின்போது அவர் தனது கையால் பிரியாணி சமைத்து, அதை படக்குழுவினருக்கு தானே பரிமாறி அவர்கள் சாப்பிட்ட பிறகு தட்டை வேறு கழுவி வைத்தாராம்.

மங்காத்தாவில் பிரியாணி
மங்காத்தா படத்தில் பணியாற்றியவர்கள் அஜீத் சமைத்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தனர்.

பொங்கல்
பிரியாணியை அடுத்து அஜீத் குமார் அருமையாக பொங்கல் செய்தார் என்று செய்தி வெளிவந்தது.

ரசம், உருளைக்கிழங்கு பொரியல்
பிரியாணி, பொங்கலைத் தொடர்ந்து அஜீத் ரசம் வைத்து, உருளைக் கிழங்கு பொரிப்பதிலும் வல்லவராக உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











