விஜய் சேதுபதியால் முடியுமா என்று சந்தேகப்பட்ட இயக்குனர்
Recommended Video

சென்னை: சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதியால் 75 வயது முதியவராக நடிக்க முடியுமா என்று பாலாஜி தரணிதரனுக்கு சந்தேகம் வந்துள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி 75 வயது முதியவராக நடித்துள்ள படம் சீதக்காதி. இந்த படத்திற்காக விஜய் சேதுபதி போட்டுள்ள மேக்கப் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் கூறியதாவது,

ஸ்க்ரிப்ட்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு 3 மாதம் பிரேக் எடுத்தேன். அதன் பிறகு சீதக்காதி ஸ்க்ரிப்ட்டை எழுதினேன். சரியான நடிகர் கிடைக்காததால் படத்தை துவங்க கால தாமதமானது. மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு நடிகர் 75 வயது நபராக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

விஜய் சேதுபதி
முதலில் அமிதாப் பச்சன் சாரை நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் அது நடக்காமல் போனது. அதன் பிறகு விஜய் சேதுபதி சீதக்காதி ஸ்க்ரிப்ட்டை கேட்டுவிட்டு நடிக்க விரும்பினார். ஆனால் 75 வயது நபராக அவரால் முடியுமா என்ற சந்தேகம் எனக்கு அப்போது இருந்தது. அவர் நடிப்பு மீது சந்தேகம் இல்லை, ஆனால் பார்க்க முதியவராக தெரியும் ஒருவரை தேடினேன். அதனால் சீதக்காதி பட வேலையை நிறுத்திவிட்டு ஒரு பக்க கதை படத்தின் வேலையை துவங்கினேன்.

ரிலீஸ்
ஒரு பக்க கதை பல காரணங்களால் ரிலீஸாகாமல் உள்ளது. ஆனால் படம் அருமையாக வந்துள்ளது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். படத்தில் வந்த ஒரு வார்த்தைக்கு சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்தது. அந்த படத்தில் புகைப்பிடித்தல், மது அருந்துதல், இரட்டை அர்த்த வசனங்கள், கிளாமர் கிடையாது. நடுத்தர குடும்பத்தை சுற்றி நகரும் படம்.

இரண்டு வேடங்கள்
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று சொல்வார்கள். அதற்கும் சீதக்காதி படத்திற்கும் தொடர்பு உள்ளது. ஒரு தமிழ் நாடகத்தை பார்க்கச் சென்று இன்ஸ்பயர் ஆகி சீதக்காதி படத்தின் கதையை எழுத முடிவு செய்தேன். படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டு வேடங்களும் இல்லை, 13 ஹீரோயின்களும் இல்லை. கலை அல்லது கலைஞர்களை புரிந்து கொள்ளாமல் போனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய படம். அதை காமெடியாக தெரிவித்துள்ளேன்.

மேக்கப்
திரையில் மக்கள் விஜய் சேதுபதியை பார்க்கக் கூடாது. மாறாக 75 வயது அய்யாவை பார்க்க விரும்பினேன். அதனால் அவரின் கெட்டப்பை பார்த்து பார்த்து செய்துள்ளோம். விஜய் சேதுபதி முதல் ஆளாக ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டு கடைசி ஆளாக வீட்டிற்கு செல்வார். மேக்கப்பை நீக்கவே ஒன்றரை மணிநேரம் ஆகும். ஆனால் அது குறித்து அவர் புகார் தெரிவிக்கவே இல்லை. எந்த பிரச்சனையும் செய்யாமல் நடித்துக் கொடுத்தார் என்கிறார் பாலாஜி.


Click it and Unblock the Notifications











