Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
பாதுகாவலருடன் மோதல் வழக்கு: ஷாருக்கான் வயிற்றில் பாலை வார்த்த மும்பை போலீஸ்
மும்பை: 2012ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் பாதுகாவலருடன் மோதிய வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது ஷாருக்கான் அரங்கத்தின் பாதுகாவலருடன் மோதினார்.
அன்றைய போட்டியில் அவரின் கொல்கத்தா அணி வென்ற பிறகு அவருடைய குழந்தைகள் மற்றும் நண்பர்கள் மைதானத்திற்குள் வந்தனர். இதை பார்த்த பாதுகாவலர் விகாஸ் தால்வி அவர்களை வெளியே செல்லுமாறு கூறினார். உடனே ஷாருக்கான் கோபம் அடைந்து அவருடன் சண்டைக்கு பாய்ந்தார்.
இதையடுத்து ஷாருக்கான் வாங்கடே ஸ்டேடியத்திற்குள் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இதற்கிடையே இது குறித்து உள்ளூர் ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கூறியிருப்பதாவது, விசாரணையில் தன் மீது சுமதப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஷாருக்கான் மறுத்துள்ளார். வாரண்ட் இல்லாமல் கைது செய்யும் அளவுக்கு அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி ஷாருக்கான் வயிற்றில் பாலை வார்த்துள்ளனர் போலீசார்.