ஆர்யா ரொம்ப கொடுத்து வைத்தவர்: இப்படிப்பட்ட மாமியார் யாருக்கு கிடைக்கும்!
Recommended Video

சென்னை: ஆர்யா மிகவும் கொடுத்து வைத்தவர், நல்ல மாமியார் கிடைத்துள்ளார்.
நடிகர் ஆர்யா நடிகை சயீஷாவை மார்ச் மாதம் திருமணம் செய்கிறார். இது குறித்து அவர் இன்று ட்வீட் போட்டதை பார்த்து அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சயீஷாவின் அம்மா ஷஹீனும் ட்வீட் போட்டுள்ளார்.
ஷஹீன்
எங்கள் வாழ்வின் அழகிய தருணம். மருமகனாக எங்கள் குடும்பத்திற்கு வரும் ஆர்யாவை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி. ஆர்யா, சயீஷாவுக்கு ஆசிர்வாதங்கள் என்று சயீஷாவின் அம்மா ஷஹீன் ட்வீட்டியுள்ளார். ஆர்யா வெளியிட்ட அதே புகைப்படத்தை ஷஹீனும் வெளியிட்டுள்ளார்.

ரீட்வீட்
ஷஹீன் ஆர்யாவை வாழ்த்தியதோடு நிறுத்தவில்லை. ஆர்யா போட்ட ட்வீட் மற்றும் அவர் தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த ட்வீட்டுகளை ரீட்வீட் செய்து வருகிறார் ஷஹீன். யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு மாமியார்.

செய்திகள்
ஆர்யா, சயீஷா திருமணம் பற்றி வெளியாகும் செய்திகள் தொடர்பான ட்வீட்டுகளையும் ரீட்வீட் செய்து கொண்டிருக்கிறார் ஷஹீன். ஆர்யா தனக்கு மருமகனாக வரப் போவதில் அவர் பெருமகிழ்ச்சியில் இருப்பது தெரிகிறது.
ஆசி
கடவுளின் ஆசியால் ஆர்யா கிடைத்ததாக நினைக்கிறார் ஷஹீன். மகளுக்கு திருமணம் நடக்கப் போகிற மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications











