twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர்: ஷாருக்

    By Mayura Akilan
    |

    டெல்லி: சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.

    ஷாருகான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் வசூலில் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிசில் முதல் இடத்தில் உள்ளது.

    எனினும் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள போராடுவதாக கூறியுள்ளார் ஷாருக்கான். டெல்லியில் அனைத்து இந்திய மேலாண்மை கழகம் நடத்திய 40-வது தேசிய மேலாண்மை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஷாருகான் பேசியதாவது:

    "நான் எனது முதல் இடத்தை இழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன். நான் இரண்டாவது இடத்திற்கு வந்து விடுவேனோ என பயப்படுகிறேன்.எனது பயமே என்னை பெரியவனாக்குகிறது.

    Shahrukh Khan Fears Not Being On Top, Made Enemies After Chennai Express

    தோல்வி பயத்திலேயே நான் கடினமாக உழைக்கிறேன்.நான் ஒருநாளும் ஒய்வு எடுப்பதில்லை. நான் கடுமையாக வேலை செய்ய வில்லை என்றால் எனது இடைத்தை இழக்க நேரிடும்.

    எனக்கு இரத்த அழுத்தம் இல்லை, இதய பாதிப்பு எதுவும் இல்லை ஏன் என்றால் நான் கடினமாக உழைக்கிறேன்.

    தோல்வியே உங்களின் உண்மையான நண்பர்களை கண்டு பிடிக்க உதவும்.கடினமான சோதனை கட்டத்தில் தான் உண்மையான நட்பை அறிய முடியும். நான் ரா ஒன் படத்தினால் அதிக நண்பர்களை இழந்தேன்.அதுபோல் அதிகமான பார்வையாளர்களையும் இழந்தேன்.

    சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் அதிகமான நண்பர்களை பெற்றேன் அதுபோல் புதிய எதிரிகளும் உருவாகி உள்ளனர்.

    English summary
    Bollywood superstar Shahrukh Khan, who is known as the King Khan and the Badshah of Bollywood recently revealed that he fears not being on the top in the B-Town. Throughout his film career, we know he has achieved a lot and it's not just his luck that has worked wonders for him. The actor's relentless work has paid off.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X