Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர்: ஷாருக்
டெல்லி: சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.
ஷாருகான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் வசூலில் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிசில் முதல் இடத்தில் உள்ளது.
எனினும் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள போராடுவதாக கூறியுள்ளார் ஷாருக்கான். டெல்லியில் அனைத்து இந்திய மேலாண்மை கழகம் நடத்திய 40-வது தேசிய மேலாண்மை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஷாருகான் பேசியதாவது:
"நான் எனது முதல் இடத்தை இழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன். நான் இரண்டாவது இடத்திற்கு வந்து விடுவேனோ என பயப்படுகிறேன்.எனது பயமே என்னை பெரியவனாக்குகிறது.
தோல்வி பயத்திலேயே நான் கடினமாக உழைக்கிறேன்.நான் ஒருநாளும் ஒய்வு எடுப்பதில்லை. நான் கடுமையாக வேலை செய்ய வில்லை என்றால் எனது இடைத்தை இழக்க நேரிடும்.
எனக்கு இரத்த அழுத்தம் இல்லை, இதய பாதிப்பு எதுவும் இல்லை ஏன் என்றால் நான் கடினமாக உழைக்கிறேன்.
தோல்வியே உங்களின் உண்மையான நண்பர்களை கண்டு பிடிக்க உதவும்.கடினமான சோதனை கட்டத்தில் தான் உண்மையான நட்பை அறிய முடியும். நான் ரா ஒன் படத்தினால் அதிக நண்பர்களை இழந்தேன்.அதுபோல் அதிகமான பார்வையாளர்களையும் இழந்தேன்.
சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் அதிகமான நண்பர்களை பெற்றேன் அதுபோல் புதிய எதிரிகளும் உருவாகி உள்ளனர்.