Don't Miss!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கிங் ஆஃப் பாலிவுட்...ஷாருக்கின் 29 வருட சினிமா பயணம்
மும்பை : உலக அளவில் புகழ்பெற்ற பாலிவுட் நடிகராக தற்போது வரை இருந்து வருபவர் ஷாருக்கான். கிங் ஆஃப் பாலிவுட், பாலிவுட் பாட்ஷா என புகழும் அளவிற்கு பல ஆண்டுகளாக புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார்.
இவர் முதன் முதலில் நடித்த தீவானா படம் ரிலீசாகி 29 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த சந்தோஷமான தகவலை ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனை ஷாருக்கானின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மும்முரமாகத் தொடங்கிய அட்லீ - ஷாருக்கான் படத்தின் முதற்கட்ட பணிகள்!
உங்களுக்காக நடிக்கிறேன்
ட்விட்டரில் ஷாருக்கான், இப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஏறக்குறைய 30 ஆண்டுகள் என் மீது அளவு கடந்த அன்பை பொழிந்து கொண்டிருக்கிறீர்கள். இதை புரிந்து கொண்டு தான் உங்களை மகிழ்விக்க தொடர்ந்து நடித்து வருகிறேன்.
அன்புக்கு நன்றி
இது எனது பாதி வாழ்க்கைக்கும் மேலானது என்பது உணர்கிறேன். உங்களுக்காக நேரம் ஒதுக்கி அன்பை பகிர்ந்து கொள்வேன். உங்களின் அன்பிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு பின் பிஸி
2018 க்கு பிறகு ஷாருக்கான் நடித்த படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இருந்தாலும் அவரின் படங்கள் எப்போது வரும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது பதான் படத்தின் வேலைகளில் ஷாருக் பிஸியாக இருந்து வருகிறார்.
அட்லீயுடன் விரைவில் கூட்டணி
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் உள்ள யுஆர்ஃப் ஸ்டூடியோசில் விரைவில் மீண்டும் துவங்க உள்ளது. இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் படத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளார்.