twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லண்டனுக்கு ஷூட்டிங் சென்ற ஷாருக் கானிடம் போலீஸார் திடீர் விசாரணை!

    By Sudha
    |

    Sharukh Khan
    பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானிடம், லண்டன் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    யாஷ் சோப்ராவின் புதிய படத்தில் ஷாருக் கான் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில், ஷாருக் கானிடம், லண்டன் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் இதில் எந்த பரபரப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது படம் குறித்த எந்தத் தகவலும், புகைப்படமும் வெளியாகி விடக் கூடாது என்று படக் குழுவினர் கவனமாக உள்ளனராம். இதற்காக, பாதுகாப்பு கோரி லண்டன் போலீஸாரை அணுகியுள்ளனர். இதையடுத்து லண்டன் போலீஸார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனராம். அதன் ஒரு கட்டமாகவே ஷாருக் கானையும் விசாரித்துள்ளனராம். ஆனால் அவர்தான் படத்தின் ஹீரோ என்று தெரிய வந்து பிறகு விட்டு விட்டார்களாம்.

    இதற்கு முன்பு நியூயார்க் விமான நிலையத்தி்ல ஷாருக் கானை பல மணி நேரம் போலீஸார் விசாரித்தது பெரும் பரபரப்பானது. அவரது பெயரில் கான் என்று இருந்ததால் இந்த விசாரணை நடந்தது. இப்போது லண்டன் போலீஸார் பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.

    English summary
    Superstar Shahrukh Khan, who is currently shooting for Yash Chopra's untitled movie, opposite to Katrina Kaif and Anushka Sharma, was questioned by the London police. The UK police were so strict in their work, that they even interrogated King Khan in the process of checking. Even earlier, once SRK was harassed and interrogated by the cops at New York airport. He was specifically questioned due to his surname 'Khan.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X