Don't Miss!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய்க்காக போராடுவோம்.. சினிமாவுக்கு நீதி வேண்டும் - ட்விட்டரில் பொங்கும் சித்தார்த்!
தலைவா படத்தை தமிழகத்தில் வெளியிட முடியாததால் கைபிசைந்து நிற்கிறது அந்தப் படக் குழு. தயாரிப்பாளர் நெஞ்சு வலி என மருத்துவமனைக்குப் போய்விட்டார். அம்மா, எப்படியாவது படத்தை வெளியிட உதவுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார் விஜய்.
இந்த பிரச்சினையில் தலையிட திரையுலகினர் மிகவும் தயங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் தனுஷ் குரல் கொடுத்தனர்.
ஆனால் பிரகாஷ்ராஜ் பின்னர் அமைதியாக ஒதுங்கிக் கொண்டார். மக்கள் நலப் பணிகள் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கருத்து கூறி, பின்னர் அதை வாபஸ் பெற்றுக் கொண்டார் தனுஷ்.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட ட்வீட்டில், 'பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு இப்போது மோசமான நாட்கள். இளையதளபதி விஜய் மற்றும் அவர் டீமை பலப்படுத்துவோம். சினிமாவுக்கு நீதி வேண்டும். போராடுவோம்,' என்று குறிப்பிட்டுள்ளார்.