விஜய்க்காக போராடுவோம்.. சினிமாவுக்கு நீதி வேண்டும் - ட்விட்டரில் பொங்கும் சித்தார்த்!

By Shankar

Sidhard extends support to Vijay
சென்னை: இளையதளபதி விஜய்யை பலப்படுத்துவோம். சினிமாவுக்கு நீதி வேண்டும், போராடுவோம், என நடிகர் சித்தார் ட்விட்டரில் கூறியுள்ளார்.

தலைவா படத்தை தமிழகத்தில் வெளியிட முடியாததால் கைபிசைந்து நிற்கிறது அந்தப் படக் குழு. தயாரிப்பாளர் நெஞ்சு வலி என மருத்துவமனைக்குப் போய்விட்டார். அம்மா, எப்படியாவது படத்தை வெளியிட உதவுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார் விஜய்.

இந்த பிரச்சினையில் தலையிட திரையுலகினர் மிகவும் தயங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் தனுஷ் குரல் கொடுத்தனர்.

ஆனால் பிரகாஷ்ராஜ் பின்னர் அமைதியாக ஒதுங்கிக் கொண்டார். மக்கள் நலப் பணிகள் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கருத்து கூறி, பின்னர் அதை வாபஸ் பெற்றுக் கொண்டார் தனுஷ்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட ட்வீட்டில், 'பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு இப்போது மோசமான நாட்கள். இளையதளபதி விஜய் மற்றும் அவர் டீமை பலப்படுத்துவோம். சினிமாவுக்கு நீதி வேண்டும். போராடுவோம்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X